விளம்பர இடைவேளை
விளம்பரங்கள் நம் வாழ்வின் ஓர் அங்கம். தொல்லைதான். ஆயினும் தவிர்க்க இயலாத தொல்லை. சில மனிதர்களைப் போல.
முன்பெல்லாம் தொலைக்காட்சி என்றாலே தூர்தர்ஷன்தான். அப்போது திரைப்படங்களுக்கு இடையே விளம்பரங்கள் வரும். ஒன்றுமே செய்ய இயலாது.
மாற்றுவதற்குச் சேனல்கள் கிடையாது. ஸ்கிப் ஆட் தோன்றியிருக்கவே இல்லை. ஒருகட்டத்தில் விளம்பரங்களை மக்கள் ரசிக்கத் தொடங்கினர்.
எதிலிருந்து தப்ப இயலாதோ அதை ரசிப்பதுதானே ஞானம்? அப்படியாக ஒரு பெரும் ஜனத்திரளுக்கு ஞானம் தந்த போதிமரங்கள் விளம்பரங்கள்.
விளம்பரத்துக்கே விளம்பரம் கொடுப்பது போல் இருக்கிறதல்லவா? இத்தனை விரிவாக விளம்பரப் புராணம் பாடுவதற்கு ஒரு காரணம் உள்ளது.











Add Comment