147. உடைந்தது காங்கிரஸ்
மந்திரிசபையைக் கூட்டி, அவர்கள் ஆதரவை உறுதி செய்துகொண்ட பிறகு, காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் மத்தியில் பலப்பரீட்சை நடத்தி, தன் வலிமையைக் காட்ட முடிவு செய்தார் இந்திரா காந்தி.
அதன்படி, காங்கிரஸ் எம்.பி.க்களின் கூட்டத்தைக் கூட்டினார்.
லோக் சபாவில் மொத்தம் இருந்த 297 காங்கிரஸ் எம்.பி.க்களில் இந்திரா காந்தியின் பக்கம் நின்றவர்கள் 220 பேர். ராஜ்யசபாவின் 132 எம்.பி.க்களில் 90 பேர் இந்திரா காந்திக்கு ஆதரவு அளித்தார்கள்.
ஆக, பழம்பெருமை வாய்ந்த காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக, இந்திரா காந்தியின் தலைமையை ஏற்றுக்கொள்பவர்கள், ஏற்றுக்கொள்ளாதவர்கள் என இரண்டாக உடைந்தது.
இரண்டு தரப்பினரும் காங்கிரஸ் கட்சியின் இரண்டு கோஷ்டிகள் என்பதால், இந்திரா காந்தி தலைமையிலான கோஷ்டிக்கு காங்கிரஸ்(ஆர்), என்றும் சிண்டிகேட் தலைவர்களின் ஆதரவாளர்கள் கோஷ்டிக்கு காங்கிரஸ்(ஓ), என்றும் பெயரிடப்பட்டது.
Add Comment