குஸ்தி, களரி, ஜிம்னாஸ்டிக்ஸ்
அவன் என்னை மறுபடியும் கொல்ல வருவான், நான் மறுபடியும் தப்பிப்பேன். அதற்காகத் திரும்ப வாழ்வேன். இது தாழ்வாரம் படத்தில் மோகன்லால் சொல்லும் ஒரு வசனம். அவருடைய திரை வாழ்வுக்கும் இது பொருந்தும். ஒவ்வொரு முறை அவருடைய படங்கள் தோல்வியடையும்போதும் இனிமேல் அவ்வளவுதான் என்ற பேச்சுகள் எழும். ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் மீண்டு வந்திருக்கிறார். ஜெயிப்பது மட்டுமே அவர் மனத்தில் இருக்கும். தோல்விகள் அந்தந்தக் கணங்களில் மறக்கப்பட்டுவிடும் என்கிறார்.
மலையாளத் திரையுலகில் மோகன்லால், மம்முட்டி இருவரின் சாயல்கள் இல்லாமல் படங்கள் வெளியாகாது என்ற நிலை இன்னமும் இருந்து வருகிறது. மோகன்லாலின் இந்த நாற்பதாண்டுகளுக்கும் மேற்பட்ட திரையனுபவத்தில் கேரள இளைஞர்கள், நடிகர்கள் அனைவரும் ஏதாவது ஒருவிதத்தில் அவரால் ஈர்க்கப்பட்டு இருப்பார்கள். பாதிக்கப்பட்டு இருப்பார்கள். பண்பட்ட திரைப்படங்கள் பார்த்து வளர்ந்த ரசிகர்களுக்கு மோகன்லால் மிகப்பெரிய விருந்து பரிமாறினார்.










Add Comment