84. பொருள் நான் விருத்திரன். கிராத குலத்தைச் சேர்ந்த சார சஞ்சாரன். எனக்குக் கடவுள்களுடன் பரிச்சயம் கிடையாது. என் தங்கை தெய்வமான பின்பு வேறெந்த தெய்வத்தையும் நினைத்தது கிடையாது. எனக்கொரு நெருக்கடி உண்டாகுமானால் அவள் பார்த்துக்கொள்வாள் என்று நினைத்துக்கொள்வேன். ஏதோ ஒன்று நடக்கும். நெருக்கடிகளினின்று...
Tag - நாவல்
83. விருத்திரன் நான் சரியாகத்தான் இருந்தேன். தெளிவாகவும் இருந்தேன். சுகக்கேடு ஏதும் உண்டாகியிருப்பதாகத் தெரியவில்லை. நிற்க, நடக்க, ஓட, குதிக்க எல்லாம் முடிந்தது. பேச்சு தெளிவாக இருந்தது. செவியில் விழும் ஒவ்வொரு ஒலியும் துல்லியமாக இருந்தது. எப்போதும் போலச் சிந்தித்தேன். அதிலும் சிக்கலேதும்...
82. ஒளியும் நிழலும் அவன் ஒரு முனி என்று மகரிஷி அத்தனை பேர் முன்னிலையில் சொன்னபோது எனக்கு அது ஒரு புகழ்ச்சி, பாராட்டு, அங்கீகாரம் என்ற அளவில் புரிந்தது. மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. யாரைச் சந்திக்க நேர்ந்தாலும் எட்டடி தொலைவைக் கணக்கிட்டு நின்று மண் பார்த்துப் பேசியே...
81. புலப்படும் வெற்றிடம் நான் உணர்ச்சிவசப்படக் கூடாது. நான் அழக்கூடாது. நான் பக்கச் சார்பெடுக்கக் கூடாது. தனியொரு ஜீவனின் சுக துக்கங்கள் என்னை அசைக்க இடம் தரலாகாது. எனக்கு நியாயமென்று ஒன்றில்லை. மகரிஷி பேசும் தருமம்தான் எனக்கும் இறை. ஒரு வித்தியாசமுண்டு. நான் மனிதப் பிறப்பெடுத்து, இறந்தபின்...
80. பர்ணமணி வித்ருவின் கோட்டைக்குள் இலக்கென்று ஏதுமின்றி நடந்துகொண்டிருந்தேன். வீடுகள், பண்டகசாலைகள், வைத்தியசாலை, உடற்பயிற்சித் திடல், ஆடல் அரங்கங்கள் என்று அடுத்தடுத்து ஏதேதோ கண்ணில் பட்டு நகர்ந்துகொண்டே இருந்தன. தலைக்கட்டு அணிந்த ஆண்களும் முக்காடிட்ட பெண்களும் சாரி சாரியாகப் போய்...
79. சாபம் வெற்றி என்று எதையும் நினைக்கத் தெரியாதவனுக்குத் தோல்வி என்ற ஒன்றனைப் பற்றி எதுவும் தெரிந்திருக்க நியாயமில்லை. நான் வெற்றியை எண்ணியவனல்லன். ஆனால் தோல்வி எப்படிப்பட்டது என்பதை அன்று கண்டேன். குத்சனின் மீது நான் கொண்டிருந்தது அன்பல்ல. அனுதாபமல்ல. இரக்கமல்ல. மதிப்பல்ல. வேறெதுவுமல்ல. நம்பிக்கை...
78. குறுவாள் அகங்காரம் சீண்டப்படும்போது மனித குலம் சிந்திக்கத் தவறுகிறது. சிந்தனை பிசகும் மனம் மிருக குணம் கொள்கிறது. கொன்று தின்பதொன்றே மிருகத்தின் தருமம். மிருகத்தின் தருமத்தை மனித குலம் ஏற்கும்போது அகங்காரம் தணிக்கப்பட்டுவிடுகிறது. ஆனால் மிருகமான தருணத்தின் அவலத்தைக் காலமெல்லாம் சுமந்துதான் தீர...
77. பிராயச்சித்தம் அவன் அறியாவிடினும் அவன் ஒரு முனி என்று நான் நம்பினேன். என் நம்பிக்கை உணர்ச்சிகளினால் உருவேற்றப்பட்டதல்ல. நான் உணர்ச்சியற்றவன். மிகப்பல சம்வத்சரங்களுக்கு முன்னர் சிறுவனாக அவன் தனது தாயுடன் பசுக்களை மேய்த்துக்கொண்டிருந்தபோது முதல் முதலில் அவனைத் தனித்துச் சந்திக்கும் தருணம் எனக்கு...
76. இனப் படுகொலை மந்திராலோசனை மண்டபத்துக்குள் விஸ்வபதி நுழையும் முன்புதான் வித்ருவின் கோட்டைக் கதவுகளை இழுத்து மூடச் சொல்லி உத்தரவிட்டிருந்தார். அதிகாலை நடந்தவற்றின் விவரமறியாத பலர் அதற்குள் கோட்டையை விட்டு வெளியேறிச் சென்றிருந்தார்கள். அதைப் போலவே கோட்டைக்கு வெளியிலிருந்தும் பலர் உள்ளே...
75. சம்ஹாரம் ஊழிக்கனல் உருத் திரண்டு நடந்து வருவது போலிருந்தது அவனது தோற்றம். சிரம் தொடங்கித் தோள்கள் வரை நீண்டு, காற்றில் பறந்தாடிய அடர்ந்து நீண்ட ரோமங்களும் பேரண்டத்தைப் பிளந்துவிடும் கூர்மையுடன் இமைக்காது நோக்கிய விழிகளும் மேரு அதிர்ந்து அடங்குவது போல அவன் எடுத்து வைத்த உறுதியான அடிகளும் அதன்...