Home » நாவல் » Page 6

Tag - நாவல்

சலம் நாள்தோறும்

சலம் – 65

65. விபூதி யோகம் வானுக்கும் பிருத்விக்கும் இடைப்பட்ட வெளியினைப் போல மனம், இருப்பது தெரியாதிருக்க வேண்டும். சூனியமல்ல. பேரொளியுமல்ல. உள்ளபடியே இருப்பது. அப்படித்தான் அது இருக்க வேண்டுமென்று எப்போதும் நினைப்பேன். தியானத்தில் அமரும்போது எண்ணியவண்ணம் மனத்தைக் குவித்துவிட்டுப் பிறகு எண்திசைக்கும் பறக்க...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 64

64. காப்பு அதர்வனின் ஆசிரமத்திலிருந்தும் வித்ருவின் எல்லையிலிருந்தும் மிகவும் விலகிக் கோட்டைக்குள் வந்திருந்தேன். இன்றெல்லாம் இலக்கேதுமின்றி ஊரைச் சுற்றித் திரியலாம் என்று விடிந்தபோதே தோன்றியது. ஒரு விதத்தில் அப்படியொரு தனித்த பயணம் அவசியம் என்று நினைத்தேன். வித்ருவுக்கு வந்த நோக்கம் ஒன்றாகவும்...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் 129

129 தாயும் அன்னையும் ஓவியர் அச்சுதன் கூடலூர் முதல் பிரபஞ்சன் முருகேச பாண்டியன் வரை தங்கியிருந்த, கலை இலக்கியத்துக்கு ஆகிவந்த மேன்ஷன் என்று சொல்லி, இவன்தான் சுகுமாரனை ஜானிஜான் கான் தெருவில் கொண்டுபோய் தங்க வைத்தான். அன்று எதோ ஒரு பண்டிகை. அதைப் பற்றி இவனுக்குப் பெரிதாக ஒன்றுமில்லை – ஒருநாள்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 63

63. உதிர்த்தவன் இன்னொரு மனிதனின் மூச்சுக் காற்று இல்லாத இடத்தில் இருப்பதே அத்தருணத்தில் என் மனநிலைக்குச் சரியென்று தோன்றியது. அதன் பொருட்டே சாரன் வித்ருவுக்குப் புறப்பட்டுச் சென்ற பிறகு ருத்ர மேருவுக்கு வந்தேன். எனக்குத் தெரியும். இடையூறுகளற்ற தவத்தின் பொருட்டு ரிஷிகள் அங்கே வருவார்கள். சிறிய...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 62

62. இடக்கண் நான் தனித்திருக்கிறேன். அலை புரண்டோடும் சரஸ்வதியின் கரையில் அதே நியக்ரோதத் தருவின் அடியில்தான் அமர்ந்திருக்கிறேன். கிளிகளும் குருவிகளும் என்னைச் சுற்றிச் சுற்றி வந்து சத்தமிடுகின்றன. உழைத்துக் களைத்து வீடு திரும்பும் உழவர்கள் அலுப்பில் சிறிது ஓய்வெடுக்க என்னருகே அமர்கிறார்கள்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 61

61. சுத்தி ஒரு குன்றினைப் போல அடர்ந்து கவிந்திருந்த நியக்ரோதத்தினடியில் ரிஷி ஆசனமிட்டு அமர்ந்திருந்தான். அவனது இரு புருவங்களுக்கு நடுவில் உயர்ந்து பொலிந்த அக்னி பஸ்மத்தையே நெடுநேரமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். நதி தொட்டு வந்து மோதிய காற்றில் அவனது சடாமுடியும் தாடியும் தருவின் மேற்புறக் கிளைகளைப்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 60

60. சரம் வாழ்நாளில் அப்படியொரு விருந்துணவை அருந்தியதில்லை. வேறு வேறு பக்குவங்களில் சமைக்கப்பட்ட கறி வகைகளும் எங்கெங்கிருந்தோ தருவிக்கப்பட்ட ருசி மிகுந்த கனி ரகங்களும் பசும்பாலில் சவ்வரிசியையும் நெய்யையும் சேர்த்து வேகவிட்டு, மது சேர்த்துப் பரிமாறப்பட்ட புரோடாஷ் என்கிற பானமும் சோமத்தையும் தயிரையும்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 59

59. தாய் தெய்வங்களினும் ஒரு மனிதன் உயர்ந்தவனாக இருப்பான் என்று நான் எண்ணிப் பார்த்ததில்லை. அப்படி எனக்குத் தோன்றுவது ஒரு பெரும் பாவமாகவும் இருக்கலாம். தெய்வங்களின் உலகில் பிழைகளும் பிசிறுகளும் மிகுந்தோர் யாருமில்லை. பாவம் புரிந்தவர்கள் தெய்வமாக இயலாது. தெய்வமான பின்பு பாவத்தின் நிழலும் நினைவில்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 58

58. சாட்சி பூதம் தினமும் துயிலெழுந்ததும் நதியைப் பார்க்கிறேன். சரஸ்வதி மாறவில்லை. அதன் ஆழமோ அடர்த்தியோ அலையடிப்போ சுருதியோ மாற்றம் கண்டதாகப் புலப்பட்டதில்லை. நதியினின்று பார்வையை உயர்த்தி வானைப் பார்க்கிறேன். அதுவும் மாறவில்லை. மித்ரன் மாறாதிருக்கிறான். வருணன் தனது கர்த்தவ்யம் தவறுவதில்லை...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 57

57. நாமகரணம் மூன்றடி இடைவெளியில் அவனுக்கு எதிரே அமர்ந்திருந்தேன். அவனது உயரம் என்னைச் சிறிது கலைத்துக் கலைத்து ஆடிக்கொண்டிருந்தது. இயல்பில் நான் கட்டுமஸ்தான தோற்றத்தில்தான் இருப்பேன் என்றாலும் வளர்ந்துகொண்டிருந்த காலத்தில் யாரோ உச்சந்தலையில் கையை வைத்து அழுத்தி, நிறுத்தினாற்போலக் காட்சியளிப்பதாக...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!