நீ இருக்கிறாய். எனவே நீ சிந்திக்கிறாய். அல்லது நீ சிந்திக்கிறாய். எனவே நீ இருக்கிறாய். உன் வீடும் உன் ஊரும் விரும்பாதென்று தெரிந்தும் உனக்குத் தோன்றியதைச் செய்கிறாய்.
ஏய்த்துத் தகர்க்கத் தெரிந்தவன் கோயில்களைக் கட்டுகிறான். ஏமாந்து அடிமைப்பட்டுக் கிடக்க மட்டுமே முடிந்தவர்கள் தொழுது கிடக்கிறார்கள் என்று அவன் நினைத்தான்.