03. ரட்சகர் அவதரித்தார்
க்ரீப்பர் சாதுவான மால்வேர்தான். விஷமற்ற பாம்பு போல. என்ன இருந்தாலும் பாம்பு பாம்புதானே? வீட்டுக்குள் ஒரு விஷமற்ற பாம்பு நுழைந்துவிட்டால் நிம்மதியாகத் தூங்க முடியுமா?
இதே நிலைதான் க்ரீப்பருக்கும். கதவைத் தட்டாமல் கொல்லைப்புற வாசல் வழியாகக் கணினிகளுக்குள் வரும். ஒரே ஒரு செய்தியை மட்டும் அச்சிடும். ‘முடிந்தால் என்னைப் பிடி’ என்னும் சவால்.
இச்சவாலை ஏற்றுக்கொண்டு க்ரீப்பரைக் கட்டம் கட்டிப் பிடித்த கதை சுவாரசியமானது.
இமெயிலுக்கும் மால்வேர்களுக்கும் தொடர்பு உண்டு. இதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் நம்மில் பலரும் அறிந்திராத தகவல் ஒன்றுண்டு. முதல் மால்வேருக்கும் இமெயிலுக்குமே தொடர்புண்டு. வாருங்கள் க்ரீப்பரைத் துரத்திப் பிடித்த கதைக்குள் செல்வோம்.











Add Comment