182. நிக்சன் – இந்திரா காந்தி சந்திப்பு
டாக்கா நகரத்தின் ராணுவத் தலைமையகத்தில் பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகளின் ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது டாக்கா நகருக்கு வெளியில் ஒரு மைக் அலறியது. கரகரப்பான குரல்.
‘பாகிஸ்தானின் ராணுவ அதிகாரிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் நான் பேசுவது கேட்கிறதா? இந்தியப் படை டாக்காவைச் சுற்றி வளைத்துவிட்டது. இனி உங்களுக்கு வேறு வழி இல்லை! இந்திய ராணுவத்திடம் சரணடையுங்கள்!’ என்று சொல்லி சில விநாடிகள் இடைவெளி கொடுத்தார்.
‘சரணடைபவர்களுக்கு உரிய மரியாதையும், மருத்துவ உதவிகளும் தரப்படும்’ என்றும் வாக்குறுதி அளித்தார். அவர்தான் சாம் மானெக் ஷா! இந்தியப் படைத் தளபதி. மானெக் ஷாவின் குரலில் இருந்த உறுதி பாகிஸ்தான் ராணுவத்தை கதிகலங்கச் செய்தது.
ஏற்கெனவே ஆயிரக்கணக்கான வீரர்களையும், நூற்றுக்கணக்கான பீரங்கிகளையும், பல போர் விமானங்களையும், கப்பல்களையும் இந்தப் போரில் பலி கொடுத்திருந்த பாகிஸ்தான், தோல்வியின் விளிம்பில் இருந்தது.















Add Comment