நோய்
ஜாப்ஸ் வினோதமான நம்பிக்கைகளால் ஆனவர். அதுவே அவருடைய பலம். பலவீனமும். தனது நம்பிக்கைகளால் ஜாப்ஸ் பெற்றவை அதிகம். இழந்தவை அதனினும் அதிகம்.
ஜாப்ஸ் சிறுநீரகக் கற்களால் அவதிப்பட்டு வந்தார். இதனை முன்பே ஓர் அத்தியாயத்தில் பார்த்திருக்கிறோம். அவை தரும் வலி அதீதமானது. ஒவ்வொரு முறை வலி மிகும் போதும் அதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்வார்.
ஓய்வெடுப்பதென்றால் இன்னதென்று அவர் அறிந்திருக்கவில்லை. வலி நிவாரணிகள் வேலை செய்யத் தொடங்கிய உடனேயே தனது வேலைகளில் மூழ்கிவிடுவார்.
ஆப்பிளின் பல்வேறு முக்கிய முடிவுகளை அவர் வலியுடனேயே எடுத்த தருணங்களும் உள்ளன. சாதாரணமாகவே கோபப்படுவார். வலியும் சேர்ந்துகொண்டால் என்னவாகும் என்று யோசித்துப்பாருங்கள்.















Add Comment