51 சரிவு
போக இருப்பது லோனாவாலா. பாம்பேக்கு அருகிலிருக்கிற உல்லாச ஸ்தலம் என்று எல்லோரும் குஷியாக இருந்தார்கள்.
இவ்வளவு எதிர்பார்த்தால் கண்டிப்பாகக் கட்டாந்தரையில்தான் கொண்டுபோய் உட்கார வைக்கப்போகிறார்கள் என்று இவன் சுதீரிடம் கூடச் சொன்னான்.
‘பாசிபிள்’ என்று அவனும் சிரித்துவைத்தான்.
எதற்காக இந்தப் பயணத்தைத் தொடங்கினோம். ஜம்முவை அடைகிற ஒருநாள் கூத்தாக இது முடிந்துவிடக்கூடாது என்று பாபா ஆம்தே மட்டுமே நினைத்துக்கொண்டிருப்பதைப்போல இருந்தன அவரது சமீபத்திய பேச்சுக்கள். இதிலிருந்து இளைஞர்கள் கிராமம் என்று அவருக்குள் முளைத்த கனவு வேர்விட்டுச் செழிக்கத்தொடங்கியிருப்பதை அவர் பேச்சில் உணர முடிந்தது.















Add Comment