21 பொறுப்பும் மறுப்பும்
கர்னல் ரேகே என்னென்னவோ சொல்லிப் பயமுறுத்திய அளவிற்கு எதுவுமே இல்லையே என்பதைப்போல இருந்தது, போய்க்கொண்டிருந்த சாலை.
திருவனந்தபுரத்திலிருந்தே பார்க்குமிடமெங்கும் மரங்களாக இருந்ததால் கேரளாவின் எல்லா ஊர்களும் ஒரே மாதிரிதான் இருக்கும்போல என்றுதான் தோன்றியது. திருவனந்தபுரத்தின் சாலைகளே ஏற்றமும் இறக்கமுமாகத்தான் இருந்தன. ஆனால், கொல்லத்திலிருந்து புனலூருக்கு வரும்போது கொஞ்சம் ஏற்றம் கூடிக்கொண்டே போனதால் கொஞ்சம் அழுத்தி மிதிக்கவேண்டியிருந்தது. வரும்போது கூடவே வந்துகொண்டிருந்த ஓடையின் அழகும் சூழலின் எழிலும் சேர்ந்து ஆயாசம் தோன்றாமல் பார்த்துக்கொண்டதால் ஏற்றம் பெரிதாகத் தெரியவில்லை என்பது இறங்கிய பின்னரே பிடிபட்டது.
இருந்தாலும் ஏன் இன்று என்றுமில்லா அதிசயமாகச் சிற்றுண்டியை இரண்டுமுறையாகக் கொடுக்கிறார்கள் என்கிற எண்ணம் தன்பாட்டில் உள்ளூர ஓடிக்கொண்டிருந்தது. ஏரியருகில் டீ குடிக்கையில் சுதீரிடம் ‘என்ன இன்றைக்கு இரண்டு முறை சிற்றுண்டி கொடுக்கிறார்கள்‘ என்று கேட்டான்.















Add Comment