சங்குப்பூவை நமது வீட்டிலும் தெருவோரங்களிலும் மலரும் ஒரு சாதாரணப் பூவாகவே அறிந்திருக்கிறோம். சில வாரங்களுக்கு முன்பு வட இந்தியாவின் மிக முக்கிய லாபமிக்க சாகுபடிகளுள் ஒன்றாகச் சங்குப்பூவை வரிசைப்படுத்தியிருந்தனர். பெரிதாக இடமோ, நீரோட்டமோ, உரமோ தேவைப்படாத ஒரு மலருக்கு எப்படி இப்படி ஒரு சந்தை உருவானது? அதற்கு ஏன் திடீரென்று இவ்வளவு புகழ்?
சங்குப்பூவுக்கு சமஸ்கிருதத்தில் ‘அபராஜிதா’ என்று பெயர். ஆங்கிலத்தில் வண்ணத்துப்பூச்சியை உருவகமாகக் கொண்டு பட்டர்ஃப்ளை பீ (butterfly pea) என்று அழைக்கிறார்கள். தாவரவியலில் க்ளிட்டோரியா டெர்னேட்டா (clitoria ternatea) என்பது உவமைப்பெயர். இப்படி அழகு, வடிவம், தெய்வீகம் என மூன்று தளங்களிலும் கொண்டாடப்படும் பூவிது. இப்போது இதனோடு மருத்துவப்பயனும் சேர்ந்து கொண்டிருக்கிறது.















Add Comment