தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி கடந்த மார்ச் மாதம் பதினைந்தாம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்றைக்குத் தொடங்கிய தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் முடிவுகள் வெளியாகும்வரை அமலில் இருக்கும். தேர்தலைச் சமரசமின்றி நடத்துவதற்கான ஏற்பாடாக அதிகாரிகளை இடம் மாற்றும் நடைமுறையும் வழக்கமானது.
ஆளும் கட்சிக்கு ஆதரவான பல அதிகாரிகளைத் துறை மாற்றுவதும் இடம் மாற்றுவதும் தேர்தல் நடைபெறும் அனைத்து மாநிலங்களிலும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. தமிழகத்திலும் பல காவல் ஆணையர்களும் மாவட்ட ஆட்சியர்களும் மாற்றப்பட்டிருக்கின்றனர். இந்த மாற்றங்கள் தேர்தல் முடிவுகள் வெளியாகும்வரை தொடரும்.
2025ஆம் ஆண்டு ஆகஸ்டு 31ஆம் தேதியோடு தமிழகத்தின் டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவாலின் பதவிக்காலம் முடிவுக்கு வந்திருந்தது. அவருடைய ஓய்வுக்குப் பிறகு புதிதாக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு தீயணைப்பு ஆணையத்தின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார்.















Add Comment