203. அர்ஸ் கொடுத்த அதிர்ச்சி
உள்துறை அமைச்சர் சரண் சிங்கின் பேரன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில், கலந்துகொண்ட இந்திரா காந்தி, அவர்களுக்கிடையிலான அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஓர் உறவினர் போல நடந்து கொண்டார்.
சரண் சிங் மற்றும் அவரது குடும்பத்தினருடன் அளவளாவினார். அவர்கள் கொடுத்த இனிப்புகளைச் சாப்பிட்டார். பேரக் குழந்தையைக் கைகளில் வாங்கிக் கொஞ்சினார். இதையெல்லாம் மொரார்ஜி சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அர்த்தம் பொதிந்த புன்னகையை வீசியபடி, சரண்சிங் தம்பதியரிடமிருந்து விடைபெற்றார் இந்திரா காந்தி.
அடுத்து, தன் தொகுதியான சிக்மகளூருக்கு விஜயம் செய்தார். அங்கே நடந்த பொதுக்கூட்டத்தில், ‘சிக்மகளூரில் இருந்து உங்கள் பிரதிநிதியாக வாக்களித்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட எனது எம்.பி பதவியை ஜனதா அரசாங்கம் பறித்ததும், கைது செய்து என்னைச் சிறையில் அடைத்ததும் சட்டத்துக்குப் புறம்பானது’ என்று முழங்கினார்.















Add Comment