புறாக்களின் கால்களில் ஓலைச்சுவடி அனுப்பியது சங்ககாலம். தூதுவர் மூலமும் கடிதங்கள் மூலமும் தகவல் சொல்லும் ஒரு காலமும் இருந்தது. இப்போது உலகமே மின்னஞ்சலிலும் மொபைலிலும் சேதி சொல்லும் காலமாகிவிட்டது. என்றாலும் உங்களுக்குக் கடிதம் எழுதும் ஆர்வம் இன்னும் மீதமிருந்தால் கடலுக்கு ஒரு கடிதம் எழுதுங்களேன்...
Tag - சுற்றுச்சூழல்
டெல்லியின் பெரும்பான்மையான பகுதிகள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டைச் சந்தித்து இருக்கின்றன. கோடைக்காலத்தாலோ வறட்சியாலோ இந்நிலை ஏற்படவில்லை. டெல்லிக்குக் குடிநீரை வழங்கும் யமுனையில் போதுமான அளவுக்குத் தண்ணீர் ஓடுகிறது. ஆனால் அது நன்னீராக இல்லை என்பதுதான் சிக்கலின் ஆதாரம். சில நாட்களுக்கு முன்புவரை...
மலைப்பிரதேசங்களின் காலை நேரங்கள் ரம்யமானவை. கோடைக்காலத்திலும் மிதமான குளிர் உடலுக்குள் ஊடுருவி எலும்புகளைத் தீண்டும். அதே நேரம் வெயில் சருமத்தைச் சுடும். பச்சை நிறப் போர்வையை விரித்தது போன்ற சுற்றியுள்ள இயற்கை எழில் கண்களை நிறைக்கும். மலைப் பிரதேசங்களில் வாழும் பரபரப்பில்லாத மனிதர்கள் பொறாமைப்பட...
இந்தியச் சூழலியல் அறிஞரான மாதவ் காட்கில், ஜனவரி 7ஆம் தேதி தனது 83ஆவது வயதில் புனேவில் காலமானார். இந்தியாவில் சூழலியல் ஆய்வுகளுக்கு அடித்தளமிட்ட முக்கியச் சிந்தனையாளர். ஆறு தசாப்தங்களாக இயற்கை வளங்களைக் காக்கத் தீவிரமாகப் போராடியவர். மக்களின் விஞ்ஞானி என்று பரவலாக அறியப்பட்டவர். 2024ஆம் ஆண்டு...
சுற்றுச்சூழல் ஆர்வலர் திம்மக்கா தனது நூற்றுப் பதினான்காவது வயதில் காலமானார். தனது வாழ்நாளில் சுமார் எட்டாயிரத்துக்கு மேற்பட்ட மரங்களை நட்டவர் திம்மக்கா. கன்றுகளை நட்டதோடு கடமை முடிந்துவிட்டதாக எண்ணாமல் குழந்தைகள்போல அவற்றைப் பேணி வளர்த்திருக்கிறார். வீட்டுக் கொல்லையில் காய், கனிகளைத் தரும்...
சுமார் 9,45,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட தான்சானியா, ஆப்ரிக்காவின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்று. 1961இல் சுதந்திரம் பெற்றது, பின்னர் 1962இல் குடியரசாக மாறியது. 1964இல் டாங்கன்யிகா மற்றும் சான்சிபார் ஆகிய பகுதிகள் ஒன்றிணைந்ததன் மூலம் முழு இறையாண்மை கொண்ட நாடாக உருவானது. இந்நாட்டின் பரப்பளவு...
சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (NTU), வடகிழக்கு ஆசிய நாடுகளின் கடல்மட்ட உயர்வைக் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடல்மட்ட உயர்வின் காரணமாகப் பல ஆசிய நகரங்கள் மூழ்கி வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் கடல் மட்டத்தின் உயரம் அதிகரிப்பதாக...
சிங்கப்பூரின் தேசிய வளர்ச்சித் துறை அமைச்சகம், அந்நாட்டின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் 800 ஹெக்டேர் பரப்பளவில் கடலை தூர்த்து, நிலத்தை உருவாக்கும் திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளது. அதன் மீது மூன்று தனித் தீவுகளும் கட்டமைக்கப்படவுள்ளன. ‘புராஜெக்ட் லாங் ஐலேண்ட்’ என்பது இத்திட்டத்தின்...
கடலோரப் பகுதிகளில் மாசு அதிகரிக்கிறது என்பதற்காக அங்கே குடியிருக்கும் மக்களை இடம் மாற்றச் சொல்கிறது அரசு. காலம் காலமாக வாழ்ந்து வரும் நிலத்தைக் காலிசெய்ய முடியாது என்று மக்கள் அடம்பிடிக்கிறார்கள். மறுத்தால் லட்சக்கணக்கில் அபராதம் கட்டவேண்டும் என்கிறது அரசு. முன்னோர்கள் காலத்திலிருந்து அங்கே வாழ்ந்த...
நீலகிரிக்கும் கொடைக்கானலுக்கும் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு, இந்த ஆண்டும் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்தியுள்ளது தமிழக அரசு. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, கோடை விடுமுறைக் காலத்தில் மட்டும் இந்த நடைமுறை இருக்கிறது. 2025 ஏப்ரல் முதல் ஜூன் வரை செயலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது...













