Home » Archives for பிரபு பாலா

Author - பிரபு பாலா

Avatar photo

முகங்கள்

தந்தைக்குச் சம்பளம் கொடுக்கும் மகன்

பெரும்பாலான மாணவர்கள் கல்லூரி வாழ்க்கை, இன்ஸ்டாக்ராம் ரீல்ஸ் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும் வயதில், ரவுல் ஜான் அஜூ தொழில்நுட்ப நிறுவனத்தை நடத்தி வருகிறார். செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை ஆயிரக்கணக்கானவர்களுக்குக் கற்பிக்கிறார்...

Read More
சாமிபூமி தொடர்கள்

சாமிபூமி – 4

பேச்சியம்மன் பெரியாச்சிக்குக் கோபத்தில் கண்கள் சிவந்தன. ஒரு கையில் குழந்தையை உயர்த்திப் பாதுகாப்பாகப் பிடித்துக் கொண்டாள். மேலும் ஆறு கைகள் முளைத்தன. வலது கையால் ராணியை இழுத்துத் தன் மடியில் கிடத்தினாள். தனது கூரிய நகங்களால் அவளுடைய வயிற்றைக் கிழித்தாள். அரசி துடிதுடித்துச் செத்துப் போனாள்...

Read More
சாமிபூமி தொடர்கள்

சாமிபூமி – 3

முனீஸ்வரன் நள்ளிரவில் அலகாட்சியம்மாவும் அவளது கணவனும் அலங்காநல்லூர் கிராம எல்லைக்கு ஓலைப்பெட்டியுடன் வந்தார்கள். அலங்காட்சியம்மா ஓலைப்பெட்டியைத் திறந்தாள். ஒரு சுருட்டுப் புகை போல மெலிதாகக் கிளம்பி உயரே எழும்பியது முனியாண்டி. புகை உயரமாக விரிந்தது. மனித ரூபத்துக்கு வந்தது. அலங்காட்சி பிரமிப்பாகப்...

Read More
சாமிபூமி தொடர்கள்

சாமிபூமி – 2

ஐயனார் மலையடிவாரக் கிராமத்துக்கு இந்தச் சாமி வந்து சில ஆண்டுகள் ஆகின்றன. காலையில் மக்கள் காட்டு வேலைக்குச் சென்றபோது கண்டிருக்கின்றனர். ஒரு மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார். அருகில் ஒரு வெள்ளைக் குதிரை கட்டப்பட்டிருந்தது. அவரது முகம் பிரகாசமாக இருந்தது. சாமியாரைத் தொந்தரவு செய்ய...

Read More
சாமிபூமி தொடர்கள்

சாமிபூமி – 1 (புதிய தொடர்)

கருப்புசாமி எல்லையில் ரத்தக் காயங்களுடன் செத்துக் கிடந்தான் கருப்பன். அவனைச் சுற்றிக் குதிரைகளும் கொள்ளையர்களும் மடிந்து கிடந்தனர். விடிகாலையின் மசமசப்பான வெளிச்சத்தில் காளைகளுடன் வயலுக்குத் தண்ணீர் இறைக்க வந்த காடன்தான் முதலில் பார்த்தான். அங்கங்கே மனித உடல்களும் குதிரைகளும் இரைந்து கிடந்தன...

Read More
புத்தகக் காட்சி

ஈரோடு புத்தகத் திருவிழா ரவுண்ட்அப்

ஈரோடு புத்தகத் திருவிழா, ஜூலை 13 தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெற்றது. கோவை புத்தகக் காட்சி நடக்கும் கொடிசியா வளாகம் போல, விழா நடந்த சிக்கய அரசு கலை அறிவியல் கல்லூரியும் நகரத்துக்குச் சற்று வெளியே உள்ளது. ஆனால் ஈரோட்டில் பன்னிரண்டு நாள்களும் திருவிழாதான். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. வாடகை...

Read More
கல்வி

விண்வெளி via அரசுப் பள்ளி

அரசுப் பள்ளியில் படிக்கும் கண்டுலா ஜெஸ்ஸி, நிலவைச் சுற்றி ஆராயும் செயற்கைக்கோளை உருவாக்கும் சர்வதேச அணியில் பங்கேற்கத் தேர்வு பெற்றுள்ளார். அறிவியல் மீதான இவருடைய ஆர்வத்தைக் கண்டறிந்த ஆசிரியர், இவருக்குச் சரியான பாதையில் வழிகாட்டியுள்ளார். இந்த மாணவியில் கடின உழைப்பு இவரை விண்வெளி வரை...

Read More
ஆளுமை

விண்வெளித் தொழிலதிபர்

கர்நாடகாவில் உள்ள சிக்மகளூரு மாவட்டத்தில் அல்டூர் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் அவைஸ் அகமது. எட்டாம் வகுப்பு வரை நவீனத் தொழில்நுட்பமோ, ஸ்மார்ட்ஃபோனோ, இணையமோ அவருக்குப் பரிச்சயமில்லை. புத்தகங்கள் வாசிப்பதன் மூலம் விண்வெளி மீது ஆர்வம் ஏற்பட்டது. அது அவரை இன்று 900 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு...

Read More
இந்தியா

கடைசி மாவோயிஸ்ட்கள்

இந்தியாவின் மத்தியப் பகுதியில் உள்ள அந்தக் காட்டிலிருந்து பாப்பா ராவ் வெளிப்பட்டார். கட்டம் போட்ட நிறம் மங்கிய சட்டை, புழுதி படிந்த கால்சட்டை, தேய்ந்து போன விளையாட்டுக் காலணி அணிந்திருந்தார். தோளில் ஒரு துப்பாக்கியைத் தொங்கிவிட்டிருந்தார். அவரது தலைக்கு இருபத்தாறாயிரம் அமெரிக்க டாலர் பரிசு...

Read More
சமூகம்

சிட்டுக்குருவிகளின் நகரம்

காலை வேளையில் ஜன்னலுக்கு வெளியே மரக்கிளையிலோ பால்கனியிலோ சிட்டுக்குருவிகள் கீச்சிடுவதைக் கடைசியாக எப்போது கேட்டீர்கள்? குருவிகளின் குரல் நினைவிருக்கிறதா? சிறுநகரம், கிராமத்தில் என்றால் வீட்டுக்குள் குருவி உரிமையாகக் கூடு கட்டும். முட்டையிட்டு, குஞ்சு பொரித்து, அக்குஞ்சுகள் இறக்கை முளைத்துப்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!