மகிந்த ராஜபக்சேவின் அண்ணன் தம்பிகளின் பெயர் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகி, ‘சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டால் சின்னப் பிள்ளையும் சொல்லும்’ என்ற லெவலுக்கு வந்தது என்னவோ 2005ம் ஆண்டிற்குப் பிறகுதான். அதாவது சகல சம்பத்துக்களும் பெற்ற ஜனாதிபதியாய் மகிந்த ராஜபக்சே முடிசூடியதற்குப் பிறகுதான் விதவிதமான...
Author - ஸஃபார் அஹ்மத்
![]()
குடும்ப அரசியல் என்பது தீண்டத்தகாத பெரும் பெரும் குற்றமல்ல. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் அரசியலில் ஈடுபடுவது ஒன்றும் தவறும் அல்ல. மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் தமக்குத் தோதாதான அரசியல் பின்புலம் கொண்ட குடும்பங்களை தம் ஆஸ்தான ஆதர்சமாய்க் கருதி அமோகமாய் வாக்குகளை வழங்கித் தேர்வு செய்து கொண்டிருந்தால்...
அது பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் ஏதோ ஒரு சிறுவர் முன்பள்ளி. நுழைவாயிலில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் வரிசைகளில் குழுமி நிற்க, அவர்கள் ஒவ்வொருவருக்கும் கைலாகு கொடுத்தவாறு கண்ணீருடன் வெளியேறிக் கொண்டிருக்கிறது மற்றொரு சிறுவர் பட்டாளம். வரிசைகளில் நிற்பவர்கள் யாவரும் பாகிஸ்தான் மண்ணின்...
உலகத்தின் முதலாவது பெண் பிரதமரைத் தேர்ந்தெடுத்த தேர்தல் இலங்கையில் 1960ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்தது. சிலோன் ரேடியோவில் அரசியல் செய்திகளைக் கேட்டுக் கொண்டு இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பிரதமரானார். தனிச் சிங்களச் சட்டத்தை அமல்படுத்தப் போய் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட பெரும்...
கல்வீச்சு வாங்கிய மகிந்த! 1951-ம் ஆண்டு என்பது மகிந்த ராஜபக்சே குடும்பத்திற்கும் சரி, இலங்கை அரசியலுக்கும் சரி… மிக முக்கியமான ஆண்டு. 1948-ம் ஆண்டு சுதந்திரமடைந்திருந்த இலங்கையை ஐக்கிய தேசியக் கட்சி ஆண்டு கொண்டிருந்தது. மதச் சார்பின்மை, கட்டற்ற ஜனநாயக விழுமியங்கள், மேலைத்தேய ஸ்டைலில் நவ...
மகிந்த ராஜபக்சே மர முந்திரிகை மரத்தின் உச்சியில் இருந்து இறங்கி வரும் வரை கையில் பிரம்போடு இருந்தார் அம்மா. ஆனால் அவரோ, ‘நீங்களும் அப்படியே நில்லுங்கள், நானும் இப்படியே இருக்கிறேன்.இந்த ஜென்மத்தில் இறங்கப் போவதில்லை’ என்று திட்டவட்டமாய்ச் சொல்லிவிட்டார். வேறு என்ன வழி..? வெள்ளைக் கொடியேற்றி, சமாதான...
‘இனி அவ்வளவுதான். எல்லாம் முடிந்தது. பொது வேட்பாளர் சிரிசேனா வென்றுவிட்டார். இதற்கு மேலும் தாக்குப் பிடிப்பதில் பலனில்லை. அறிவித்து விடலாம்தான். எப்படி அறிவிப்பது..? மக்களோ பழங்கால இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பது போல அத்தனை பரபரப்பாய்த் தேர்தல் முடிவுகளைப் பார்த்துக்...
இதுவரை நூற்று ஐம்பத்து நான்கு கசையடிகள், பதின்மூன்று தடவை கைது, ஐந்து தடவை குற்றவாளி என்று நீதிமன்றத் தீர்ப்பு, 2015-ஆம் ஆண்டு முதல் பதினாறு வருட சிறைவாசம் என்று நெடும் துயரைத் தாங்கிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் நர்கீஸ் முஹம்மதி என்ற ஈரான் மனித உரிமைப் போராளிக்கு 2023-ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான...
சனிக்கிழமை என்பது அநேகமான உலக நாடுகளில் விடுமுறை தினம். அதுவும் யூதர்களுக்குச் சனிக்கிழமை என்பது முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமை போன்றொரு புனித நாள். வர்த்தக நிலையங்கள், அரச அலுவலகங்கள் எல்லாவற்றையும் இழுத்துச் சாத்திவிட்டு ஓய்வில் இருப்பார்கள் இஸ்ரேலியர்கள். இப்பேர்பட்ட சனிக்கிழமை ஒன்று, யூதர்களின்...
இலங்கை ஜனாதிபதி ரணிலும் அவர் பரிவாரங்களும் எதிர்பார்த்துக் காத்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இரண்டாம் தவணைப் பணம் கிடைப்பது பெரும் இழுபறிக்குள்ளாகி இருக்கிறது. நான்கு வருடங்களுக்கு 2.9 பில்லியன் டாலர் கடனுதவித்திட்டம் என்ற பெயரில் கடந்த மார்ச் மாதம் முந்நூற்று முப்பது மில்லியன் டாலர்களை...













