ரணில் விக்ரமசிங்க இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வருடம் நிறைந்தது. ஐந்து முறை பிரதமராகி ஒரு முறையேனும் தன் பதவிக்காலத்தைப் பூர்த்தி செய்யாமல் பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கே சவால்விட்ட ரணில், ஜனாதிபதியாவார் என்று இரண்டு வருடங்களுக்கு முன்பு யாராவது சொல்லி இருந்தால் உலகம் சிரித்திருக்கும்...
Author - ஸஃபார் அஹ்மத்
![]()
ஆசியாவின் மிகப் பிரபல அரசியல்வாதிகளில் ஒருவரும், மலேசியப் பிரதமருமான அன்வர் இப்ராஹீம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து ஆறு மாதங்களாகின்றன. 2023-ம் ஆண்டின் முதல் காலாண்டில் மலேசியா ஏழு சதவீதப் பொருளாதார வளர்ச்சியுடன் கெத்தாய் எழுந்து நிற்கிறது. கொவிட் தந்த துயரங்களையும், 2020 – 2022 காலத்தில்...
லெபனான் முன்னாள் அதிபர் மைக்கல் அவுன் தன் பதவிக்காலத்தைப் பூர்த்தி செய்து, வீடு சென்று எட்டு மாதங்கள் ஆகின்றன. கடந்த வருடம் அக்டோபர் முதல் பன்னிரண்டாவது தடவையாக தன் நாட்டிற்கு அதிபர் ஒருவரைத் தேர்வு செய்ய லெபனான் பாராளுமன்றம் தவறிக் கொண்டிருப்பது என்பது நமக்கு வேண்டுமென்றால் ‘இதென்ன...
கடந்த வாரம் பலஸ்தீன் அதிபர் அல்லது அத்தாரிட்டியின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் சீனாவுக்கு விஜயம் செய்த போது, தம் சரித்திரத்தைவிடப் பழைமையான ஒரு உலகப் பிரச்னையில் மத்தியஸ்தம் வகிக்க விரும்புவதாக அறிவித்திருந்தது சீனா. ஆம். இஸ்ரேல் – பலஸ்தீன் தகராறில் சமாதான சகவாழ்வு விரும்பி என்ற குல்லாவைச் சீனா...
நாஜி ஜெர்மனியர்களால் யூதர்கள் துரத்தித் துரத்தி சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட போது போலந்தில் இருந்த தன் தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான யூதர்களைக் காத்தருளிய ஒஸ்கார் சிண்ட்லர் போல, ருவாண்டாவில் நடந்த இனப் படுகொலைகளின் போது நானூறுக்கும் மேற்பட்ட டுட்ஸி இனச் சிறுவர்களுக்குத் தன் அநாதை இல்லத்தில் அடைக்கலம்...
தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தின் அழகிய ‘நாகு’ நகரத்திற்கு இது போதாத காலம். பருத்த குவிமாடத்துடனும் (Dome) , நான்கு மினாராக்களுடனும் (Minaret) புத்தம்புதுப் பொலிவுடன் நகருக்கே அடையாளமாய்த் திகழும் ‘நாஜியாங்’ பள்ளிவாசலைக் காக்க நகரவாசிகள் திரண்டிருக்க, அவர்களுடன் ஐயாயிரம் சீன ராணுவ வீரர்கள்...
கடந்த வருடம் ஜூலை 9ம் தேதி அறுபத்தொன்பது இலட்சம் மக்களால் ஐம்பத்திரண்டு சதவீதப் பெரும்பான்மையுடன் தேர்வு செய்யப்பட்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே நாட்டைவிட்டு ஓடிய போது அநாதையாகிப் போனது ராஜபக்சே குடும்பத் தொழிற்சாலை. பதினைந்து வருடங்களாக இத்தொழிற்சாலையை இயக்கப் பயன்படுத்தப்பட்ட இனவாதத்...
துருக்கி அதிபர் ரஜப் தையிப் எர்டோகனுக்கு சங்கு சத்தம் கேட்டுக் கொண்டிருப்பதாகவே மே 14-ம் தேதி நடந்த அதிபர் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை சர்வதேச மீடியாக்கள், அரசியல் விற்பன்னர்கள் முதல் ஊர்பேர் தெரியாத யூடியுப் அறிஞர்கள் வரை கதறினார்கள். ஆனால் அத்தனை ஆருடங்களையும்...
அமெரிக்க அதிபர் தேர்தல் களேபரங்களுக்குச் சற்றும் குறையாத பரபரப்புடன் துருக்கி அதிபர் தேர்தலும், பாராளுமன்றத் தேர்தலும் நடந்து ஓய்ந்திருக்கிறது. எழுபது ஆண்டுகாலப் பனிப்போரே ஒளிந்திருந்த இம்மாபெரும் தேர்தல் திருவிழாவில் அமெரிக்காவும், மேற்கு ஊடகங்களும் ஆறு கட்சிகளுடன் கலக்கல் கூட்டணி அமைத்த முன்னாள்...
‘ஸ்கொட்லான்ட் யார்ட் போலீஸை அழைத்து வந்து ஈஸ்டர் குண்டு வெடிப்பின் பின்னணியில் மகா மூளையாய்ச் செயற்பட்ட நபர்களின் முகங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவேன்’ என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, திடீரென்று திருவாய் மலர்ந்திருக்கிறார். இப்படித்தான் கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதியான போது கூட...













