‘பெண்களுக்காகச் சிங்கப் பெண் சிறப்புப் படை உருவாக்கப்பட்டுள்ளது’ என்னும் இந்த வாரப் பரபரப்புச் செய்தியைப் பார்த்தபோது எனக்குள், ‘பெண்களை ஏன் சிங்கத்தோடு ஒப்பிடுகிறார்கள்?’ என்ற அறிவார்ந்த கேள்வி எழுந்தது. அந்தக் கேள்வியோடு சில கிளைக் கேள்விகளும் வரிசையாக வந்தன.
இந்த ஒப்பீட்டை யார் முதலில் முன்மொழிந்திருப்பார்கள்?
முதலில் அதை யார் பொதுவில் சொல்லியிருப்பார்கள்?
எதனால் பெண்களைச் சிங்கத்தோடு ஒப்பிட்டார்கள்?
பெண்கள் மனத் திடம் கொண்டவர்கள் என்பதாலா?
குடும்பத்தைப் பாதுகாப்பவர்கள் என்பதாலா?
அல்லது பெண்கள் ஒரு பார்வை பார்த்தாலே வீட்டிலிருப்பவர்களுக்கு அவரவர்களின் கடமைகள் தானாக நினைவுக்கு வந்துவிடுமே… அதனாலா?















Add Comment