Home » பா. ராகவன் » Page 28

Tag - பா. ராகவன்

சலம் நாள்தோறும்

சலம் – 54

54. தரு மீண்டும் காய்ச்சல் தீவிரமடையத் தொடங்கியிருந்தது. இம்முறை அது பனியினாலோ, குளிரினாலோ உண்டானதல்ல என்று அந்த பிராமணனிடம் சொன்னேன். வாழ்வில் முன்னெப்போதும் கண்டிராத அதிர்ச்சியும் பதற்றமும் என்னை இறுகக் கவ்வியிருந்தன. சுவாசம் சீராக இல்லை. நடுக்கம் உள்ளுறுப்புகள்வரை இருப்பதை உணர முடிந்தது. கண்கள்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 53

53. ஜீவாத்மா ஒவ்வொன்றும் விசித்திரமாக இருந்தது. எல்லாமே வினோதமாக இருந்தது. ஒரு கொலைச் செயலை நிகழ்த்தவிருப்பவனுக்கு இருக்கக்கூடிய ஆகக் குறைந்தபட்சப் பதற்ற உணர்ச்சிகூட எனக்கில்லை. தன்னை அழிப்பதற்காக வந்திருப்பவன் என்று தெரிந்தும் அவன் என்னை ஓர் அதிதியாகவே நடத்தினான். உலகு தோன்றிய நாள்முதல் எங்குமே...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 52

52. மூப்பன் அதர்வனின் ஆசிரமத்தை நெருங்கியபோது உக்கிரமாகப் பனி பெய்யத் தொடங்கியிருந்தது. இரவு நடந்து வந்த வழியெல்லாம் பனிதான், குளிர்தான். ஆனால் பொறுக்க இயலாத அளவுக்கு இல்லை. இன்னொன்றையும் கவனித்தேன். எங்கள் கிராத பூமியில் நான் காணாத பனியில்லை. நடந்து செல்லும்போது கட்டிக் கட்டியாகவே தலையில் விழும்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 51

பாகம் 2 51. ஆயுதம் இருள் முற்றிலும் விலகியிருக்கவில்லை. இரவெல்லாம் நடந்த களைப்பில் சிறிது அமர்ந்து இளைப்பாறலாம் என்று தோன்றினாலும், உடனே வேண்டாம் என்றும் சொல்லிக்கொண்டேன். இன்னும் அரை நாழிகை நடந்தால் அவனது ஆசிரமத்தை நெருங்கிவிடலாம். கடமையைச் செய்து முடித்த பின்பு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 50

50. மூன்று நாழிகை சிசிர ருது தொடங்கிய முதல் நாள் பிரம்ம முகூர்த்த நாழிகையில் நாங்கள் வித்ரு தென்படும் தொலைவைச் சென்றடைந்தோம். அம்முறை வழக்கத்தினும் அதிகமாகப் பனி பெய்துகொண்டிருந்தது. சாரனுக்குப் பனிப் பொழிவு ஒரு பொருட்டாக இல்லை. ஹிமத்திலேயே பிறந்து வளர்ந்தவன் என்பதை நான் அளித்த கம்பலத்தை...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 49

49. மகரம் நதியின் ஊடாகவே நடந்து, ருத்ர மேருவைக் கடந்து கரையேறியபோது குளிர்க் காய்ச்சல் கண்டது. உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது. என்னால் கண்களைத் திறக்கவே முடியவில்லை. மெல்ல மெல்ல சுய நினைவிழந்து அனத்தத் தொடங்கினேன். அந்த சூத்திர முனி என்னைத் தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு சிறிது தூரம் நடந்தான். பிறகு...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 48

48. பிரம்ம சித்தம் பிரம்மத்துக்குப் பதற்றம் என்ற ஒன்றில்லை. பதற்றம் இல்லாத சிந்தை பரிதவிப்பதில்லை. பரிதவிப்பு உணர்ச்சிகளினால் பின்னப்படுகிற ஒரு வலை. எனவே பிரம்மம் உணர்ச்சிகளைக் களைந்தது. ஆனால் மிகக் கவனமாக மனித மனத்தை உணர்ச்சிகளின் மூலக்கூறுகளைக் கொண்டு வடிவமைத்த வினோதத்தைச் சிந்திக்கிறேன்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 47

47. அஹிபுதன்யன் நான், கிராத குலத்தைச் சேர்ந்த சார சஞ்சாரன். அதர்வன் என்னும் பிராமணனைக் கொலை செய்வதற்காகச் சென்றுகொண்டிருப்பவன். இது எனக்களிக்கப்பட்ட ஒரு ராஜாங்கப் பணி. சரியாகச் செய்தால், எங்கள் ராஜன் என்னைப் பாராட்டுவான். பரிசிலளித்து கௌரவிப்பான். ஒருவேளை என் முயற்சியில் நான் தோற்க நேர்ந்தால்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 46

46. மாயத் திரை பதற்றமும் நடுக்கமும் என்னை ஆட்கொள்ளத் தொடங்கிவிட்டது. பைசாச வாழ்வில் பதற்றம் என்ற ஓர் உணர்ச்சிக்கு இடமே இல்லை என்றுதான் நினைத்திருந்தேன். ஏனெனில் எங்கள் உலகத்தில் எதிரிகள் கிடையாது. துரோகிகள் இருக்க முடியாது. யாரும் யாரையும் அழிக்க முயற்சி செய்வதில்லை. அதிகாரத்தைக் கைப்பற்றும்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 45

45. சொல்லில் விளைந்தவன் தன் மனத்துக்குள் நுழைந்து தகவலைத் தூவிச் சென்றது அதர்வனாக இருக்கலாம் என்று விளையாட்டாகச் சொல்லிவிட்டு சாரன் தூங்கியேவிட்டான். உறக்கம் முற்றிலும் இல்லாமல் போய், நான்தான் எதையெதையோ எண்ணித் தடுமாறிக்கொண்டிருக்கிறேன். தான் சொன்னதன் அடர்த்தி என்னவென்றாவது அவனுக்குத்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!