34. ரதம் தனது வினாக்களின் நியாயம் அல்லது தகுதி குறித்து அந்த சூத்திர முனிக்கு எப்போதும் சிறியதொரு அகம்பாவம் உண்டு. நான் அதை ரசித்தேன் என்று சொல்ல இயலாது. ஆனால் என்னால் அதை மதிக்காமல் இருக்க முடிந்ததில்லை. அவன் உணர்ச்சிமயமானவனாக இருந்தான். ஏனோ எனக்கு அது எப்போதும் உவப்பற்றதாகவே இருந்தது. உணர்ச்சிகளை...
Tag - பா. ராகவன்
33. ஒன்று மர உடும்பு பிடிப்பதற்காகக் கானகத்தின் மையப் பகுதிக்குச் சென்றிருந்தேன். நெடுநேரம் சுற்றித் திரிந்த பின்னர் ஒரு பிலக்ஷண மரத்தின் மீதிருந்த துவாரத்துக்குள்ளிருந்து ஒன்று தலையை நீட்டியதைக் கண்டேன். மர உடும்பு பொதுவாகப் பகல் பொழுதில் பொந்தினுள் இருக்க விரும்பாது. மீறி இருக்கிறதென்றால் அது...
32. உயர்ந்தது நான் மிகவும் வெளிப்படையாக இருப்பதாக அந்த முனி சொன்னான். தான் கள்ளத்தனமாக என் மனத்துக்குள் புகுந்து அங்கிருப்பதைக் கண்டறிய முயன்றதை ஒப்புக்கொண்டு அதற்கு மன்னிப்பும் கேட்டான். எனக்கு ஒன்று புரியவில்லை. இதில் மறைத்துக் களமாட என்ன இருக்கிறது? கன்னுலா எனக்கனுப்பிய செய்தியை நான் அவனிடம்...
31. பெயர்ச் சொல் அவனைப் போலொரு சூதற்ற மனிதனைக் காண்பது அபூர்வம். எனக்குச் சாரனின் வெளிப்படைத்தன்மை பிடித்திருந்தது. அச்சமோ அச்சமின்மையோ இல்லாத ஏகாந்த வெளியில் அவன் இருந்தான். அது பிடித்திருந்தது. யாருடைய கருத்தினாலும் அவனது தீர்மானம் அசைவதில்லை என்னும் உறுதிப்பாடு பிடித்திருந்தது. அதர்வனுக்கு...
30. உளக் குவிப்பு முன்பொரு முறை அந்த பிராமண ரிஷி என்னிடம் சொன்னான், ‘சூத்திர முனியே, நீ ஒரு சராசரி மனிதன்தான். ஆனால் சராசரி மனிதர்களால் எட்ட இயலாத உளக் குவிப்பு உன்னிடம் இருக்கிறது. தருணத்தின் தேவைக்கேற்ப நீ உன் தேகத்தையும் சித்தத்தையும் ஒற்றைப் புலனாக்கிக்கொண்டுவிடுகிறாய். இது அபூர்வமானது.’ நானொரு...
29. தெய்வங்களின் உரையாடல் நான் கன்னுலா. கின்னர பூமியில் உள்ள முஞ்சவத்திலிருந்து புறப்பட்டு, ஆதிசிவக் குன்றில் சர்சுதி உற்பத்தியாகும் ஊற்றை அடைந்து, அங்கிருந்து நதியின் தடம் பிடித்து நடந்துகொண்டிருக்கும் சாரனின் இளைய சகோதரி. இவ்விதமாகத் தலையைச் சுற்றிச் சொன்னால்தான் சரித்திரத்துக்குப்...
28. பேசும் குருவி பல நாள்களாக நடந்துகொண்டிருந்தோம். கணக்கு வைத்துக்கொள்ளாமல் நெடுந்தொலைவைக் கடந்திருந்தோம். ஆனால் கவனப் பிசகாகக் கூட சர்சுதியின் கரையைவிட்டு விலகிச் செல்லவேயில்லை. ஆதிசிவக் குன்றிலிருந்து புறப்பட்டுத் தனியாக வந்தபோதுகூட சிறிது தடம் நகர்ந்து மீண்டும் வந்து சேர்ந்துகொள்வேன். வழியில்...
27. தொப்புள் கொடி முனி என்னைக் காட்டிலும் பிராயம் மிகுந்தவன். ஒரு தோராயக் கணக்கில்தான் சொல்கிறேன். எனக்கு முப்பது சம்வத்சரங்களுக்கு முன்னர் அவன் பிறந்திருக்க வேண்டும். ஆனால் தோற்றத்தில் இப்போதும் முப்பது பிராயத்து வாலிபனைப் போலத்தான் இருந்தான். அது பற்றி எனக்கு வியப்பெல்லாம் இல்லை. உடலத்தைப்...
26. எண்மர் கிராத குலத்து சார சஞ்சாரன் பைசாச மேருவுக்குச் சென்றதன் காரணத்தால் அவன் சூத்திர முனி குத்சனைச் சந்திக்க நேர்ந்து, அவனைக் குறித்து அறிந்து கொண்டான். இருபத்து மூன்று சம்வத்சரங்களாக அச்சாரனின் வரவின் பொருட்டுக் காத்திருந்த சூத்திர முனி குத்சன் தனது சரிதத்தை அவன் சிந்தைக்குள் செலுத்தி வைக்க...
25. சாபம் நான் குத்சன். எது ஒன்றையும் நானாவிதமாக எண்ணிப் பார்த்து முடிவு செய்யாமல் ஒரு சொல்லைக்கூட வீணடிக்கும் வழக்கம் எனக்கில்லை. சொல் அளவில் அத்தனை கவனம் காப்பவன் செயலளவில் எப்படி இருப்பேன்? அந்தக் கிராத குலத்து சாரசஞ்சாரன் என்னிடம் சொன்னான், ‘முனியே நீ சக்தி படைத்தவன். அதை உணர்கிறேன். முனியே உன்...














