‘செவல, தாவுடா தாவு!’
மெஹ்ராபியனின் ஆய்வு ஞாபகம் இருக்கிறதா? உரையாடலில் நாம் வெறும் ஏழு சதவீதம் மட்டுமே வாய்மொழியைப் பயன்படுத்துகிறோம். எனவே இம்முறையில் பொய்யைக் கண்டறிவதற்கான வாய்ப்பு இயல்பாகவே சொற்பம்தான். பெரும்பாலான மக்கள் இந்த ஏழு சதவீதத்தை நம்பித்தான் பொய்யறியும் முயற்சியில் இறங்குகிறார்கள். இந்தச் சொற்ப வாய்ப்பிலும் பொய்யறியும் திறனை எவ்வாறு மேம்படுத்திக்கொள்ளலாம் எனப் பார்ப்போமா?
வெற்றிகரமாகப் பொய் சொல்லி ஏமாற்றுபவர்கள் கடைப்பிடிக்கும் உத்தி ஒன்று உள்ளது. உண்மையான சம்பவங்களுக்கு இடையே பொய்யை நூதனமாக நுழைக்கும் வித்தை அது. இதில் பொய்யர் கூறுவது முற்றிலுமாகப் பொய்யாக இருக்காது. உண்மைச் சம்பவங்களுக்குள் அது ஒளிந்திருக்கும். Text-bridging என்ற உத்தி இந்த வகைப் பொய்களுக்கு ஓர் உதாரணம். நாம் ‘உரைப் பாலம்’ என்று வைத்துக்கொள்வோம். ‘நான் எங்க பொய் சொன்னேன்? உண்மையைச் சொல்லல, அவ்வளவுதான்’ என்று கூறும் தகைமை படைத்தோர் இந்த உரைப் பால வித்தகர்கள்.
















Add Comment