26-செப்-2022.
நார்வே, ஸ்வீடன், டென்மார்க் நாடுகளில் கடலுக்கடியில் தொடர்ச்சியாக நில அதிர்வுகள் பதிவாகின. பால்டிக் கடற்பரப்பில் அரை மைல் சுற்றளவுக்குக் கொப்பளிக்கும் ஊற்றாக மீத்தேன் எரிவாயு கசிவு தென்பட்டது. கடற்படுகையிலும் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டிருந்தன.
ரஷ்யாவிலிருந்து ஜெர்மனிக்கு பால்டிக் கடல்வழியாக இயற்கை எரிவாயுவைக் கடத்தும் நோர்ட் ஸ்ட்ரீம் குழாய்கள் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ராணுவத் தரத்திலான வெடிபொருள்களின் எச்சம் கடலின் மேற்பரப்பில் தென்பட்டது.
இருபது பில்லியன் டாலர் மதிப்புடைய ஐரோப்பாவுக்கான எரிவாயு போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. ஜெர்மனியின் ஐம்பது சதவீத எரிவாயு இறக்குமதி இதை நம்பியே இருந்தது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கிய ஆறு மாதங்களில் நடந்த இச்சம்பவம், தற்போது ஜெர்மனியால் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் வல்லுநர்களைக் கொண்ட சிறு குழுவே இதை நிகழ்த்தியுள்ளது.
















Add Comment