நான்கு வருடங்களுக்கு முன்பு திவாலாகித் திருவோடு ஏந்தியதோடு மட்டுமல்லாமல் அதிபரையும் துரத்தி அடித்த இலங்கையின் நிலைமை இன்று வேறு. இலங்கை ‘உயர் மத்தியத்தர வருமான நாடாக’ (Upper Middle Economic State) முன்னேறி இருப்பதாக உலக வங்கி தன் புதிய தரவரிசையில் சான்றளித்து இருக்கிறது. உலக நாடுகளைக்...
Tag - ரணில் விக்கிரமசிங்கே
இலங்கையில் முதலில் ஜனாதிபதித் தேர்தல் வருமா, அல்லது பாராளுமன்றத் தேர்தல் வருமா என்ற பரபரப்பு ஓடிக் கொண்டிருக்கும் போது, எதிலும் சுவாரசியமில்லாத ஒரு கூட்டம் ‘சரி தேர்தல் வருமா?’ என்று கேட்டுக் கிலியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தேர்தல் வருமா என்று கேட்பவர்கள் இரண்டு தரப்பினர்...
தொண்ணூற்று மூன்று சதவீத எழுத்தறிவு, எழுபத்தாறு ஆண்டுகள் என்ற சராசரி ஆயுள் காலம், மனித அபிவிருத்திச் சுட்டெண் என்றழைக்கப்படும் ‘Human Development index’ இல் ஆசியாவில் முதலாவது இடம், சுற்றிவரக் கடல் வளம்,எதை விதைத்தாலும் பிழைத்துக் கொள்ளுமளவுக்கு விதவிதமான சீதோஷ்ண நிலையுடன் கூடிய ஒன்பது...
‘சர்வதேச நாடுகள் எல்லாம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அச்சத்துடன் பார்க்கின்றன. அவரோடு கவனமாகவே கொடுக்கல் வாங்கல் செய்கின்றன. நமது நாடும் செழிப்புற்று வருகிறது. இன்று உலக அரங்கில் உலாவி வரும் அதிகாராதிபதிகளில் எமது தலைவரும் ஒருவர்.’ என்று ஜனாதிபதி ரணிலின் ஆஸ்தான அல்லக்கைகளில் ஒருவரான...
இலங்கையில் நடந்த மக்கள் புரட்சியின் நேரடி வருணனை. கோட்டபாய ராஜபக்ச ‘பதவி விலகுவதாக’ அறிவித்தது அநாவசியமானது; உண்மையில் அவர் மக்களால் நீக்கப்பட்டிருக்கிறார் என்பதைப் புரிய வைக்கிறது இக்கட்டுரை. ‘கோட்டா கோ ஹோம்’ என்று தொண்டை கிழியக் கத்தினது எல்லாம் போதும். இனி முடிவைப் பார்த்துவிடலாம்.’...
புரட்சிகர இயக்கமாகத் தோன்றி, இடதுசாரி அரசியல் இயக்கமாக உருப் பூண்டு இலங்கையில் இயங்கும் ஜனதா விமுக்தி பெரமுன, அடுத்தத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்துவிடுமா? 1971 ஏப்ரல் 5. புரட்சிக்குத் தேதி குறித்தாயிற்று. தேசம் முழுக்க இருக்கும் அத்தனை போலிஸ் ஸ்டேஷன்களையும் தகர்த்து ஆயுதங்களைக் கொள்ளையடித்து...
டிசம்பர் 18, 2010 அன்று ஆப்பிரிக்க தேசமான துனிஷியாவில் மக்கள் புரட்சி வெடித்தது. ஓர் எளிய தள்ளுவண்டி பழக்கடைக்காரர், வாழ முடியாமல் தற்கொலை செய்துகொண்டதன் தொடர்ச்சியாக, மக்கள் பொங்கி எழுந்தார்கள். அரசுக்கு எதிரான தங்கள் அதிருப்தியை ட்விட்டரில் காட்ட ஆரம்பித்து, அது வெகு வேகமாகப் பரவி மக்கள்...
மே 9ம் தேதி அந்தக் கலவரம் நடந்தது. அதுவரை அரசுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருந்த மக்கள் அமைதி வழியில்தான் தமது எதிர்ப்பைக் காட்டிக்கொண்டிருந்தார்கள். அன்றைக்கு அது கலவரமாக உருமாறியது. தேசமே பற்றி எரிந்து, இறுதியில பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். அப்போதிலிருந்து ஜனாதிபதி கோட்டாபயவுக்கு...














