தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா வெள்ளியன்று காலமானார். தொண்ணூறு வயதான அவர், மூப்பால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மதுரை அருகில் உள்ள சாத்தங்குடி என்ற ஊரில் 1936இல் பிறந்தவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தார். தான் படித்த கல்லூரியிலேயே தமிழ்ப் பேராசிரியராகவும் பின்னர் தமிழ்த் துறைத் தலைவராகவும் பணியாற்றினார். சிறு வயதிலிருந்தே பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி எனப் பல போட்டிகளில் கலந்து கொண்டார்.
தமிழ் மேல் இருந்த ஆர்வம் அவரைப் பட்டிமன்றப் பேச்சுகளுக்கு இழுத்துச் சென்றது. கல்லூரி, மாவட்ட, மாநில அளவில் நடந்த பட்டிமன்றங்களில் கலந்து கொண்டு பேசத் தொடங்கினார். ஒரு பேச்சாளராகத் தொடங்கிய அந்த பயணம் பின்னர் அவரை நடுவராக்கியது. அப்போது மிகவும் அனுபவம் வாய்ந்த தமிழறிஞர்கள் நடுவர்களாக இருந்த நேரம். அதனால் இவருக்குச் சில சங்கடங்களும் எழுந்தன. இருந்தாலும் அதைக் கண்டுகொள்ளாமல் கடந்து வந்தார்.
















Add Comment