யானை-மனித மோதல்களைத் தடுக்க இதைவிடச் சிறந்த அறிவியல் முறை இல்லை என்பது வல்லுநர்களின் கருத்து.
Author - ரிஷி ரமணா
![]()
கடற்கரையின் அரிப்பு ஐம்பதடி நீளம், ஒன்பதடி ஆழத்துக்கு அதிகரித்தபோது மாநில அரசு கவலைகொண்டது. என்சிசிஆர் எனப்படும் தேசியக் கடலோர ஆராய்ச்சி மையம், ஐஐடி வல்லுநர்கள் அடங்கிய, ஒன்பது பேர்கொண்ட குழுவை அமைத்தது.
ரேடியோ-கார்பன் டேட்டிங் முடிவுகளின்படி, இந்தப் பானை ஓட்டுக் கிறுக்கல்களின் காலம் கி.மு. ஆறிலிருந்து கி.மு. மூன்றாம் நூற்றாண்டு வரை. ஆனால், அசோக பிராமி எழுத்துகளின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனாவின் தற்போதைய பரவலைக் கட்டுப்படுத்த, மக்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும். வேக்சின்களைச் செலுத்திக்கொள்ளாதோர் இப்போதாவது முறையாகச் செலுத்திக்கொள்ளவேண்டும்.
சமீபத்தில் இந்திய-பாகிஸ்தான் போர் அச்சுறுத்தல் பெருகியிருந்த நாள்களில் பாகிஸ்தானை வெளிப்படையாக ஆதரித்ததைத் தொடர்ந்து இந்திய மக்கள் தன்னெழுச்சியாகத் துருக்கியைப் புறக்கணிக்கத் தொடங்கியுள்ளனர். ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான்...
சென்னை முழுவதும் இருநூறு இடங்களில் ரெட் பட்டன் ரோபோகாப் என்ற நவீன காவல் எந்திரத்தை நிறுவவுள்ளது பெருநகர சென்னை காவல் துறை. இந்த எந்திரத்திலுள்ள சிவப்பு பட்டனை அழுத்துவதன் மூலம் உடனடியாகக் காவல் துறையின் உதவியைப் பெறலாம். சென்னை நகரம் அதிகமான மக்கள் அடர்த்திகொண்டதாக உள்ளது. ஆண்-பெண் பேதமின்றி...
கடலிலுள்ள கரியமில வாயுவை உறிஞ்சும் தொழில்நுட்பத்தைக்கொண்டு கடலைச் சுத்தம் செய்யத்தொடங்கியிருக்கிறது சீக்யூர் (SeaCURE) என்ற நிறுவனம். இதனால் காற்றிலுள்ள கரியமில வாயுவைக் கடலால் மேலும் திறனுடன் உறிஞ்சமுடியும். புவி வெப்பமயமாதலைத் தடுக்க மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகளுள் ஒன்றாக இது உள்ளது. கார்பன்-டை...
வருகிற மே பதிநான்காம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் ஐம்பத்து இரண்டாவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ளார் பூஷன் ராம்கிருஷ்ண கவாய். தான் ஓய்வு பெறவிருப்பதைத் தொடர்ந்து பி.ஆர்.கவாயைப் பரிந்துரைத்துள்ளார் தற்போதையத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா. கவாய் சுமார் ஆறு மாதங்களுக்குத் தலைமை நீதிபதியாகப் பதவி...
மண் சொல்லும் சேதி இரண்டாயிரத்து இரண்டாம் வருடத்தின் ஆகஸ்ட் மாதம் அது. இங்கிலாந்திலுள்ள சொஹம் (Soham) கிராமத்தினர் மிகவும் கவலையாக இருந்தனர். ஹோலியையும் ஜெசிக்காவையும் நீண்ட நேரமாகத் தேடியும் கண்டுபிடிக்கமுடியவில்லை. இருவரும் பத்து வயதே நிரம்பிய இணைபிரியாத் தோழிகள். இனிப்பு வாங்கி வருவதாகச்...
2020ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான இரு நிதியாண்டுகளில் 4484 சிறை மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் 952 சிறை மரணங்களுடன் உத்திரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. 172 சிறை மரணங்களுடன் தென்னிந்தியாவில் முதலிடம் பிடித்துள்ளது தமிழகம். கைது செய்யப்பட்ட நபர்...














