223. அனுதாபத்துக்குரிய அஞ்சய்யா
டெல்லியைப் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஊரின் எந்தப் பக்கம் போனாலும் கட்டுமானப்பணிகள் கனஜோராக நடந்துகொண்டிருந்தன.
ராஜீவ் காந்திக்குப் பக்கபலமாக அருண் சிங், அருண் நேரு உள்ளிட்ட பலரும் இருந்தார்கள். பஞ்சாப் மாநில கவர்னராக இருந்த கே.டி.சத்தர்வாலை ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமித்தார் பிரதமர் இந்திரா காந்தி.
மேலும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான பணிகளைக் கவனிப்பதற்காக இருபத்தெட்டு கமிட்டிகள் உருவாக்கப்பட்டன.
பத்திரிகைகள் ராஜீவ் காந்தி எத்தனை ஈடுபாட்டோடும் அக்கறையோடும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளைக் கவனித்துக் கொள்கிறார் என்று பாராட்டி எழுதின.
புள்ளிவிவரப் புலிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான உள்கட்டமைப்பு மற்றும் இதர பணிகளுக்காக 80 லட்சம் செங்கற்கள், லட்சம் டன் சிமெண்ட், 90 ஆயிரம் டன் இரும்பு, 300 கிமீ நீளத்துக்கு கேபிள்கள் பயன்படுத்தப்பட்டன என்று புளகாங்கிதம் அடைந்து எழுதினார்கள்.
















Add Comment