பேரன்பின் பெருவெளியில் ஒரு சுழல்
(மௌலானா ஜலாலுத்தீன் ரூமி)
கிபி பதின்மூன்றாம் நூற்றாண்டு. உலக வரலாற்றின் மாபெரும் போர்களும், மங்கோலியப் பேரரசின் கொடூரமான படையெடுப்புகளும் மத்திய ஆசிய நிலப்பரப்பைச் சிதைத்துக் கொண்டிருந்த காலம். மனித உயிர்களுக்கும் ஆன்மிக மாண்புகளுக்கும் எந்தவொரு பாதுகாப்பும் இருக்கவில்லை.
இன்றைய துருக்கியில் இருக்கும் ‘கொன்யா’ (Konya) என்ற நகரில் ஆன்மிகத்தைப் போதித்துக் கொண்டிருந்தார் மௌலானா ஜலாலுத்தீன் ரூமி. உலகப் புகழ்பெற்ற இஸ்லாமியச் சட்ட அறிஞர். மிகச் சிறந்த தத்துவப் பேராசிரியரும் கூட. ஆன்மிகக் குருவான ஷம்ஸ் தப்ரீஸின் வருகைக்குப் பின், மாபெரும் கவிஞராகவும் உருவெடுத்தார்.
பதினான்காம் நூற்றாண்டின் சூஃபி வரலாற்று அறிஞர் அகமது அஃப்லாகி, தன் ‘மனா கிப் அல்-ஆரிஃபின்’(Manaqib al-‘Arifin) என்ற நூலில் பதிவு செய்துள்ள ஆவணங்களின்படி, பிரபஞ்சக் காதலில் திளைத்த ரூமியின் இருபத்து நான்கு மணிநேர நாள்காட்டி இப்படியாக விடிந்தது.
















Add Comment