ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக கடுமையாகத் தோற்றதற்கும் திமுக கூட்டணி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவன் மிக அதிக வாக்கு விதியாசத்தில் வெற்றி பெற்றதற்கும் பலரும் பல காரணங்களைச் சொல்கிறார்கள். பணம் கொடுத்தார்கள்; பட்டியில் அடைத்தார்கள்; பிரியாணி போட்டார்கள் என்று சொல்லப்படும் காரணங்களை முழுமையாக மறுக்க முடியாதுதான். பணம் என்பது ஒரு பக்கத்திலிருந்து மட்டுமல்ல; இரண்டு பக்கங்களிலிருந்தும் கொடுக்கப் பட்டதாகத்தான் சொல்லப் பட்டது. ஆயினும் அதுவே வெற்றி தோல்விக்கான காரணம் என்றும் நம்ப முடியவில்லை. காங்கிரஸ் பெற்ற வாக்கு 64.58 சதவீதம். அதிமுக பெற்ற வாக்கு 25.75 சதவீதம். வெற்றிக்கும் தோல்விக்கும் இத்தனை பெரிய வித்தியாசம் எப்படித்தான் வந்தது?
இதைப் படித்தீர்களா?
சித்தனே, கடவுளை ஏன் படைத்தீர்கள் என்று நான் கேட்க மாட்டேன். யாருக்காவது, எதற்காவது அஞ்சியிருப்பது குற்றங்களைக் குறைக்குமென்று நானறிவேன்.
சிவனென்றும் அவனென்றும் இவனென்றும் பலரில்லை. உருவும் பெயருமற்ற ஒற்றைப் பெருந்தனிமத்துக்கு ஊருக்கொரு பேரும் பேருக்கொரு உருவும் தந்தது மனிதனே அன்றி...















Add Comment