Home » மு.க. ஸ்டாலின் » Page 2

Tag - மு.க. ஸ்டாலின்

நம் குரல்

கைது அரசியல்

மணிப்பூர் விவகாரத்தில் உச்சநீதி மன்றத்தை விமரிசனம் செய்த குற்றத்துக்காகப் பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி தமிழ்நாட்டுக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, மூன்று நாள்களுக்குப் பின்னர் பிணையில் வெளிவந்துள்ளார். பத்ரி சேஷாத்ரியின் மணிப்பூர் தொடர்பான கருத்துகள் ஏற்கத்தக்கவையல்ல. சிந்திக்கத் தெரிந்த எந்த...

Read More
தமிழ்நாடு

மதுரையில் ஓர் அறிவுத் திருத்தலம்

“சென்னை தமிழ்நாட்டின் தலைநகர் என்றால் மதுரை தமிழ்நாட்டின் கலை நகர். எனவேதான் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைய வேண்டும் என்று முடிவு செய்ததும் அது மதுரையில் தான் இருக்க வேண்டும் எனத் தீர்மானித்தோம்” என்றார் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின். “இந்நூலகத்தின் மூலம் தென்மாவட்டங்களில் அறிவுத் தீ பரவப்...

Read More
நம் குரல்

மதுக்கடைகள், ரசீதுகள் மற்றும் சில சிந்தனைகள்

உணவு, உடை, உறைவிடம் என்கிற மூன்று அடிப்படைகளில் சிக்கல் இல்லாத நிலை உண்டாகும்போது கேளிக்கை என்னும் நான்காவது அம்சத்தைத் தேடிச் செல்வதே மனித குலத்தின் இயல்பாக ஆதிகாலம் முதல் இருந்து வந்திருக்கிறது. போதை என்பதைக் கேளிக்கையின் ஓரங்கமாக நாம் கொள்ள இயலும். ஓர் அரசு இதனை மட்டுப்படுத்தலாம், தேட வைக்கலாம்...

Read More
நம் குரல்

தடுக்கி விழுந்த தார்மீகம்

ரெய்டு, கைது, விசாரணை என்பதெல்லாம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கோ, மக்களுக்கோ புதிதல்ல. ஊழலை ஒரு சாதாரண விஷயமாக எடுத்துக்கொண்டு சிறிது நேரம் பேசிவிட்டு மறக்கப் பழகிவிட்டோம். ஓர் ஊழல் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர் கைதாகி தண்டனை பெறும்போதுதான் அது ஓரளவு மதிப்புப் பெறுகிறது...

Read More
தமிழ்நாடு

சிங்கப்பூரில் ஸ்டாலின்: சாதித்தது என்ன?

இந்த மே மாதம் 24 மற்றும் 25’ஆம் நாட்கள் அரசுமுறைப் பயணமாக தமிழக முதல்வரும் அவரது அமைச்சரவை, அதிகாரிகள் குழுவினர் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூருக்கு வந்திருந்தார்கள். நோக்கம் முதலீட்டாளர்களை ஈர்ப்பது. முதல்வரின் பயணத்திட்டம் சிங்கப்பூருக்கானது மட்டுமல்ல, ஒன்பது நாட்களுக்கு, சிங்கப்பூர் மற்றும்...

Read More
நம் குரல்

சாராயச் சாவுகளும் உதவாத தீர்வுகளும்

எல்லா பொருள்களுக்கும் ஒரு மலிவு விலை மாற்று உண்டு. இது எல்லா காலத்திலும் உண்டு. கள்ளச்சாராயமும் அப்படித்தான். சில மரணங்கள் ஏற்படும்போது மட்டும் அதிரடியாகச் செயல்பட்டு ஒன்றிரண்டு தினங்களில் சுமார் இரண்டாயிரம் பேரைக் கைது செய்ய முடிகிறது என்றால் இது எவ்வளவு பெரிய துறை, எத்தனை ஆயிரம் பேர் இதில்...

Read More
நம் குரல்

திமுகவும் நீட் எதிர்ப்பு விளையாட்டுகளும்

திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைந்தன. இரண்டு ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வுகள் அமைதியாக நடந்து முடிந்திருக்கின்றன. அரசைக் குறை சொல்வதல்ல நோக்கம். நடைமுறை சாத்தியமில்லாத ஒன்றைத் தேர்தல் வாக்குறுதியாகத் தரும்போது ஆய்ந்து தெளிய வேண்டியது மக்கள் பொறுப்பே. அதைச் செய்ய விடுத்து...

Read More
நம் குரல்

தவறுகளின் தொடக்கப் புள்ளி

தமிழர்கள் என்றில்லை. பொதுவாக மனிதர்கள் அனைவருமே மூன்று விஷயங்கள் சார்ந்து மிகுந்த எச்சரிக்கை உணர்வு கொண்டிருப்பார்கள். வேலை-வருமானம் முதலாவது. குடும்பம்-சுற்றம் அடுத்தது. மதம் உள்ளிட்ட சொந்த நம்பிக்கைகள், சார்புகள் மூன்றாவது. இந்த மூன்றில் எது ஒன்றின்மீது கல் விழுந்தாலும் உடனே பதற்றம் எழும்...

Read More
நம் குரல்

மாண்டஸ் புயலும் ‘சில’ விமர்சனங்களும்!

‘நீர்த்துப் போன மாண்டஸ் புயலை பேரிடர் என பில்டப் செய்வதா?’ என்று கேட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. கூடவே,‘கஜா புயல், கொரோனா போன்ற பேரிடர்களைக் கையாண்டு சாதனை படைத்தது அதிமுக அரசு’ என்றும் பெருமிதப்பட்டிருக்கிறார். நல்லது. ஆனால், 2015-ம் ஆண்டு பெய்த பெருமழையின்போது...

Read More
உலகம்

சம்பாதித்துக்கொண்டே படித்தால் என்ன?

கடந்த வாரம் தமிழ்நாட்டின் தொழில் மேம்பாட்டுத் திறன் இணையத்தளம் திடீரென உலக அளவில் கவனம் பெற்றது. டிவிட்டரில் பலராலும் பாராட்டப்பட்டு, பகிரப்பட்டது. மனிதவளத்துறையில் பணியாற்றுவதால் ஆர்வம் மேலிட, இணையத்தளம் சென்று பார்வையிட்டேன். ஒபாமா – சிங் உடன்பாட்டு முறையில் இந்தியாவில் கல்வித்துறையை மேம்படுத்த...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!