சாமித்தோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப் பதியில் ஆண்டுதோறும் ஆவணி, தை, வைகாசி ஆகிய மாதங்களில் திருவிழாக்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசித் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூன் 1ஆம் தேதி வரை 11 நாள்கள் இத்திருவிழா நடைபெறுகிறது.
‘தாழக் கிடப்பவர்களைத் தற்காப்பதே தர்மம். இறைவன் ஒருவனே, அவனே பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறான். இறைவனின் படைப்பில் சாதிகளில் ஏற்ற தாழ்வு எதுவும் இல்லை. ஆண்டான் அடிமை என்ற வேறுபாடு இறைவனுக்குக் கிடையாது. அகிலத்தில் இறைவன் கூறும் இரண்டே குலங்கள் சான்றோர் குலம், நீசக் குலம்.’
‘இறைவனுக்கு பூஜை, ஹோமங்கள், புனஸ்காரம், உயிர்ப் பலி, காணிக்கை, காவடி போன்ற எதுவும் தேவையில்லை அன்பு மட்டுமே இறைவனை அடையும் வழி என்ற உண்மையை எடுத்துரைக்கிறது. இறைவன் நமக்குள்ளே இருக்கிறான்’ என்பதை உணர்த்துவதே அய்யா வழி.















Add Comment