210. தரை இறங்கிய விமானம்
ஜூன் 25ஆம் தேதி காலை. சஞ்சய் காந்தி தகனம் செய்யப்பட்ட இடத்துக்குச் சென்றார் ராஜீவ் காந்தி. அங்கிருந்து அஸ்தியை ஒரு தாமிரக் கலசத்தில் பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார்.
இந்திரா காந்தியின் இல்லத்தில் ஒரு மரத்தடியில் அந்த அஸ்திக் கலசம் வைக்கப்பட்டது. அந்த இடத்துக்குச் சென்ற இந்திரா காந்தி கதறி அழுதார். உடனிருந்த ராஜீவ் காந்தி, அம்மாவை ஆறுதலாக கையால் அணைத்துக் கொண்டார்.
முந்தைய நாள் சஞ்சய் காந்தியின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் பலரும் கூடி அமர்ந்திருந்தார்கள். ராமாயணம் வாசிக்கப்பட்டது. இந்திரா காந்தி மருமகள்கள் சோனியா, மேனகாவுடன் அங்கே சிறிது நேரம் அமர்ந்திருந்தார்.
ராஜீவும் சோனியாவும் சஞ்சய் காந்தியின் அஸ்தியை எடுத்துக் கொண்டு அலகாபாத் புறப்பட்டனர். அவர்களோடு சஞ்சய் காந்தியின் நண்பர்கள், இளைஞர் காங்கிரஸ்காரர்கள் என ஏராளமானவர்கள் உடன் சென்றார்கள்.
















Add Comment