67 ஊர்சுற்றி
மதுரா போனதும் எல்லோரும் ஆக்ரா போய்விடுவார்கள் என்று எதிர்பார்த்ததாலோ என்னவோ, பரத்பூரிலேயே, ‘ரேலியை விட்டு யாரும் எங்கும் போகக்கூடாது’ என்ற பாபா ஆம்தே கடுமையாக எச்சரித்திருந்தார்.
அதைக் காற்றில் பறக்கவிட்டு, மதுராவிலிருந்து ஆக்ராவுக்கு ரயிலேறியது, பாதியில் விட்ட காவிப் பயணத்தைத் தொடர்வதான கிளுகிளுப்பை உண்டாக்கிற்று. தாஜ்மகாலைப் பார்ப்பதை விட அதைப் பார்க்கப் பாஷை தெரியாமல் கிளம்பிப் போவதே பெரிதாகப் பட்டது. தன்னால் எதுவும் முடியும் எனத் தன் தோளைத் தானே தட்டிக்கொண்டபடி போய்க்கொண்டிருந்தவனுக்குக் குதூகலத்தில் பார்க்கிற எல்லாமே புதிதாகத் தெரிந்தன.















Add Comment