முதலில் வெனிசுவேலா, பிறகு இரான். இனி கியூபா.
உலகெங்கிலும் தனக்கு ஒவ்வாத ஆட்சியாளர்களையும் ஆட்சியமைப்புகளையும் மாற்றியமைக்கும் அத்துமீறலில் படு தீவிரமாக ஈடுபட்டுள்ளது அதிபர் டிரம்ப்பின் அமெரிக்க அரசு. வெனிசுவேலா மற்றும் இரான் நாடுகளை அடுத்து கியூபாதான் அதன் இலக்கு என்பதே உலக அரசியல் நோக்கர்களின் கணிப்பாக உள்ளது. அதை உண்மையாக்கும் வகையில் அமைந்துள்ளது அமெரிக்காவின் அண்மைகால நடவடிக்கை.
அப்படி என்ன செய்து விட்டது அமெரிக்க அரசு?
கியூபாவின் முன்னாள் அதிபர் ரவுல் காஸ்ட்ரோ (Raúl Castro) மீது குற்றப் பத்திரிகை ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. தொண்ணூற்று நான்கு வயதாகும் ரவுல் காஸ்ட்ரோ, கம்யூனிச கியூபாவின் முதல் அதிபர் ஃபிடெல் காஸ்ட்ரோவின் இளைய சகோதரர். கியூபாவின் அதிபராகப் பன்னிரண்டு ஆண்டுகள் (2006-2018) அதிபராகக் கோலோச்சியவர். அதற்கு முன்பு, 1959 முதல் தனது அண்ணனின் தலைமையின் கீழ் கியூபாவின் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தவர்.
அவர் மீது அமெரிக்கா சுமத்தும் குற்றச்சாட்டு என்ன?















Add Comment