212. மாமியார் x மருமகள்
ஒருபக்கம் ராஜீவ் காந்தியின் அரசியல் பிரவேசப் பரபரப்புகள் அரங்கேறிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் இந்திரா காந்தியின் குடும்பத்தில் இனி மேனகா காந்தியின் நிலைமை என்ன என்பது குறித்த குழப்பம் நிலவியது.
சஞ்சய் காந்தி மரணம் அடைந்தபோது மேனகாவுக்கு வயது இருபத்து மூன்று.
இதே வயதில்தான் 1941இல் இந்திரா காந்தியும் காதல் வயப்பட்டு, மணந்தால் ஃபெரோஸ் காந்தியைத்தான் மணந்து கொள்வேன் என்று முரண்டு பிடித்தார்.
சுமார் நாற்பதாண்டுகள் கழித்து, இப்போது சுதந்தரமாக இயங்க விரும்பும் மேனகா காந்தியை எப்படிக் கையாளுவது என்பதில் அவருக்கு ஒரே குழப்பம்.
அவரைச் சுதந்தரமாக அரசியல் களத்தில் இறக்க அவருக்கு மனமில்லை. மேனகா காந்திக்கோ, பொது வாழ்க்கையை முற்றிலுமாகத் துறந்து வீட்டோடு மருமகளாக அடங்கிப் போக மனமில்லை.















Add Comment