‘பொன்னியின் செல்வன்-1’ படத்தில் வரும் ‘தேவராளன்’ பாடலைக் கேட்டிருப்பீர்கள். எங்கேயோ கேட்ட பாடலாக இருக்கிறதே என்று ஒரு எண்ணம் தோன்றிக் கொண்டே இருந்தது அதைக் கேட்டதும். ‘பாலியில் நடக்கும் கெட்சாக் நடனத்தில் கேட்டதுதான் இது’ என்றோர் ஐயம் எழுந்தது. ஆனாலும் குழப்பம்தான். பின்னொரு நாளில் யூட்யூபில் ரகுமானின் பேட்டியைப் பார்த்த பிறகுதான் புரிந்தது- இப்பாடலுக்காகவே அவர் சென்ற வருடம் பாலித் தீவுக்கு சென்றிருந்தார் என்பது.
இதைப் படித்தீர்களா?
சித்தனே, கடவுளை ஏன் படைத்தீர்கள் என்று நான் கேட்க மாட்டேன். யாருக்காவது, எதற்காவது அஞ்சியிருப்பது குற்றங்களைக் குறைக்குமென்று நானறிவேன்.
சிவனென்றும் அவனென்றும் இவனென்றும் பலரில்லை. உருவும் பெயருமற்ற ஒற்றைப் பெருந்தனிமத்துக்கு ஊருக்கொரு பேரும் பேருக்கொரு உருவும் தந்தது மனிதனே அன்றி...















பொன்னியின் செல்வன் படம் பார்க்கும் போது எனக்கும் அதே எண்ணம்
தோன்றியது. உங்களை போலவே நானும் பாலி தீவு சென்று அந்த நடனத்தை பார்த்திருந்ததால் என்னால் அந்த ஒலியின் தாக்கத்தை கண்டு கொண்டேன். கட்டுரையில் இன்னும் விரிவாக அங்கே இந்து மத தாக்கத்தை பற்றி எழுதி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
ஏ.கே. செட்டியார் தன்னுடைய கிழக்காசிய பயணக்கட்டுரையில் பாலி தீவை பற்றி குறிப்பிட்டு அங்கு இருந்த இந்துக்கள் வீடு வாசலில் கோலம் போடும் பழக்கத்தையும், செருப்பை வீட்டின் வெளியில் விட்டு செல்லும் பழக்கத்தையும் பற்றி குறிப்பிட்டு இருப்பார்.