அந்தத் தெருவின் பெயர் லெட்ரா ஸ்ட்ரீட். அங்கே சாலையின் நடுவே ஒரு எல்லைச் சாவடி. அதனை அண்மிக்கும் போது ஒரு அறிவிப்புப் பலகை. அதில் “போலிப் பொருட்களைக் எமது நாட்டுக்குள் கொண்டு வருவது குற்றச் செயலாகும்” எனும் அர்த்தத்தில் ஆங்கில வார்த்தைகளைக் கொண்டிருந்தது. “எல்லைக்கப்புறம் போலிப் பொருட்கள் வாங்க வாய்ப்புகள் இருக்கிறது. முட்டாள்தனமாக எதையாவது வாங்கிக் கொண்டு வந்து எங்களிடம் அகப்பட்டால் உங்களுக்கு கஷ்டகாலம் இருக்கிறது” எனும் மறைமுகமான எச்சரிக்கை என்றே இந்த அறிவிப்புப் பலகையின் வார்த்தைகளுக்கு நான் அர்த்தம் எடுத்துக் கொண்டேன்.
இதைப் படித்தீர்களா?
எல்லோரும் நெற்றி நிறைத்த நீரணிந்திருக்கிறார்கள். எனக்கு அவ்வழக்கமில்லை. எதிலும் ஒரு நியாயம் வேண்டும். இந்தச் சனம் என்னை எப்படித் தங்களில் ஒருவனாகக்...
தேர்தல் காலம் முடிந்து இயக்கங்களின் காலம் தொடங்கியுள்ளது. தேசிய அளவில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியும், தமிழக அளவில் அண்ணாமலை, லதா ரஜினிகாந்த்...















Add Comment