சோஷியல் மீடியாவில்தான் இப்போது பலருக்கும் பொழுது புலர்கிறது. நாள் முழுவதும் அதன் தாக்கம். தூங்கும் முன் செய்யும் கடைசிச் செயலாகவும் அதுவே. ஒருவகையில் பின் தூங்கி முன் எழும் ஒன்றாக சோஷியல் மீடியா மாறிவிட்டது.
இது வெறுமனே டிஜிட்டல் உலகம் சார்ந்தது மட்டுமல்ல. நம் வாழ்வின் அன்றாட நடவடிக்கைகள் தொடங்கி அரசியல் ஆட்சி அதிகாரம்வரை அனைத்தையும் தீர்மானிப்பதில் சோ.மீயின் பங்கு அதிகம்.
நவீனச் சமுதாயத்தின் முக்கிய அங்கமாக மாறிவிட்டது சோ.மீ. இதை எவ்வாறு கையாள்வது என்று பலருக்கும் தெரிவதில்லை. இதற்கெனத் தனியாக வகுப்புகள் எதற்கும் சென்று படிக்கவில்லை.
தொடக்கத்தில் பூனைக்குட்டி வீடியோக்கள் பார்ப்பது, பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்வது போன்ற சாதுவான செயல்களுக்கு மட்டுமே இவை பயன்பட்டன.
















Add Comment