இலங்கையில் அவசரமாக இரண்டு புதிய சிறைச்சாலைகளை அரசாங்கம் உருவாக்கப் போகிறது.
ஒன்று, தென்னிலங்கையில் உள்ள ஒரு வைத்தியசாலையைச் சிறைச்சாலையாக மாற்றப் போகிறார்கள். மற்றையது பிரிட்டிஷ் ஆட்சியில் நிர்மாணிக்கப்பட்டது. 138 ஆண்டுகள் இலங்கையின் மிக முக்கியச் சிறைச்சாலையாக இருந்தது. எத்தனையோ முக்கியப் பிரமுகர்கள் உள்ளிட்டவர்கள் தூக்கில் இடப்பட்ட கண்டி பழைய போகம்பர சிறைச்சாலை.
இந்தச் சிறைச்சாலையின் புராதனத் தன்மையைக் கருத்தில் கொண்டு அதனைச் சுற்றுலாத் தலமாக மாற்றத் தீர்மானித்தது அப்போதைய அரசாங்கம். 2014 ஜனவரி முதல் நாளில் மங்களகரமாகப் பழைய போகம்பர சிறைச்சாலைக்குப் பூட்டுப் போடப்பட்டது.
ஆனால் நீர்கொழும்பு சிறைச்சாலையில் சில நாட்களுக்கு முன்னதாக இடம்பெற்ற பாரிய வன்முறைச் சம்பவம், அந்தப் பூட்டுகளை அகற்றுவதற்கான கட்டாயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
















Add Comment