கடந்த இரண்டு மாதங்களாக இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ், ஹைபா, மேற்கு ஜெரூசலம் எங்கும் லட்சக்கணக்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுமி நெத்தன்யாகு அரசு முன்மொழிந்திருக்கும் புதிய நீதித்துறை சீர்திருத்தங்களுக்கு எதிராகக் கோஷம் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இஸ்ரேலிய வான்படை வீரர்களில் பெரும்பாலானோர் அரசு சட்டமூலத்தை வாபஸ் வாங்கும் வரை பயிற்சிகளுக்குச் செல்வதில்லை என்று சொல்லியிருக்க, முன்னாள் ராணுவத் தளபதிகள் பலரும் படுகாட்டமாய் நெத்தன்யாகு அரசை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். தெளிவாய்ச் சொன்னால் இஸ்ரேலின் ஆன்மா இப்போது இரண்டாய் உடைந்து போய் இருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
ஒன்று கேட்க வேண்டும். பெயரன்றி வேறொன்றையும் நானறியாத வேட்டன் எறிபத்தன் என்னைப் போலொரு சார்வாகனா?
நீ மரணமற்றவன் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. உன் சிந்தையற்ற சிந்தையைப் பாதுகாப்பான இருப்பிடமாகக் கொண்டு நாசச் செயல்கள் புரிய முடியுமென்று...















Add Comment