பழநியில் நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்தைத் தனியார் இருவருக்கு இரண்டு கோடி ரூபாய்க்குப் பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பழநி அருகில் பாலசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி மணியக்காரர், 1888ஆம் ஆண்டு பழநி மலை அடிவாரத்தில் தனக்குச் சொந்தமான 1.4 ஏக்கர் நிலத்தைக் கோவிலுக்குத் தானமாக எழுதிக் கொடுத்திருக்கிறார். மடம் கட்டவும், இந்து மதக் கோட்பாடுகளைப் பரப்பவும் நிலத்தை வழங்குவதாகக் கூறியிருக்கிறார். அந்த நிலம் கோவிலுக்கும், கோவில் நிர்வாகத்துக்கும் மட்டுமே சொந்தம், யார் பெயருக்கும் நிலஉரிமையை மாற்றக் கூடாது போன்ற நிபந்தனைகளை விதித்திருந்தார்.
















Add Comment