113. பலிப் பொருள்
பொய்யுரைப்பது மட்டுமன்று; உண்மையைச் சொல்லாதிருப்பதும் பொய்யென்றே ஆகுமென்று நினைக்கிறேன் ஐயனே. தத்தனின் பெற்றோர் அவனைத் தேடி வந்ததை அவனிடம் நான் சொல்லத்தான் வேண்டும்,
என்று சார்வாகன் சொன்னான்.
சொல்லலாம் சார்வாகனே. ஆனால் எப்போது வந்தார்கள், என்ன கேட்டார்கள், நீ எப்படிச் சமாளித்து அனுப்பினாய் என்று அவன் அறிய விரும்புவான்.
யோசித்தேன் ஐயனே. அவன் அப்படி வினவினால் நான் உங்களுடைய அனைத்துத் திட்டங்களையும் அவனுக்குத் தெரிவிக்கும்படி ஆகும். இதில் வேறொரு பெரும் சிக்கல் உண்டு.
சொல்.
உங்கள் திட்டம் என்னதென்பது குறித்து எனக்கே நீங்கள் இன்னும் தெளிவாகச் சொல்லவில்லை.
















Add Comment