டோக்கியோ மாநகர அரசு அலுவலகத்தின் வழித்தடத்தில் ஐம்பது வயது அரசு அதிகாரி ஒருவர் அரைக்கால் சட்டை, போலோ டி-ஷர்ட், ஸ்னீக்கர் காலணிகளுடன் இயல்பாக நடந்து செல்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஜப்பானில் மட்டுமல்ல, உலகின் பெரும்பாலான கார்ப்பரேட் அலுவலகங்களிலும் இந்தக் காட்சி கற்பனைக்குக்கூட இடமில்லாத ஒன்றாக இருந்திருக்கும். இன்று அது அங்கே அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டது.
டோக்கியோ பெருநகர நிர்வாகம் வழங்கியுள்ள ‘டோக்கியோ கூல் பிஸ்’ (Tokyo Cool Biz) வழிகாட்டுதலின்படி, அரசு அலுவலகங்களிலும் பல தனியார் நிறுவனங்களிலும் பணியாளர்கள் அரைக்கால் சட்டை அணிந்து வர அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது வெறும் ஆடை விதிமுறையில் செய்யப்பட்ட சிறிய மாற்றமல்ல. தொழில்முறை ஒழுக்கம் என்ற கருத்தையே மறுபரிசீலனை செய்யும் அமைதியான கலாசாரப் புரட்சி.
















Add Comment