இந்தியாவில் ஜவஹர்லால் நேரு பதினாறு ஆண்டுகளுக்கு மேல் பிரதமராக இருந்தார். அவரது மகள் இந்திரா காந்தியும் பதினோரு ஆண்டுகளுக்கு மேல் பிரதமராக இருந்தார். தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி பதினோரு ஆண்டுகள் 111 நாட்களுக்கு மேலாகப் பிரதமராகத் தொடர்கிறார்.
ஆனால் உலகில் பல நாடுகளில் அரசியல் ஸ்திரமின்மையால் ஆட்சியாளர்கள் மாறுகிறார்கள் அல்லது மக்களால் மாற்றப்படுகிறார்கள். நமது அண்டை நாடுகளான இலங்கை, பங்களாதேஷ் மற்றும் தற்போது நேபாளத்தில் இப்படி ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தாய்லாந்து நாட்டிலும் பிரதமர் மாறியுள்ளார். இந்தோனேசியாவிலும் அரசு மாற்றத்துக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. மேலை நாடுகளில் தற்போது பிரான்சில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் பிரான்சின் ஐந்தாவது பிரதமராக செபாஸ்டியன் லொக்கோர் என்பவர் சில நாட்களுக்கு முன்பு பதவியேற்றுள்ளார்.
இதே நிலைதான் ஜப்பானிலும் ஏற்பட்டுள்ளது. ஜப்பான் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடு. ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் அங்கு பத்து முறை பிரதமர்கள் மாறியுள்ளனர். இதனால் அந்நாட்டு அரசியலில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது.















Add Comment