Home » நாள்தோறும் » Page 53

Tag - நாள்தோறும்

காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 18

18. அந்த இருபது பேர் கோகலே தென்னாப்பிரிக்காவுக்கு வந்ததும் அங்குள்ள மக்களிடம், ஆட்சியாளர்களிடம் பேசியதும் 1912ல். அப்போது அவர் போட்ட கணக்கின்படி, அங்குள்ள இந்தியர்களுடைய துன்பங்களெல்லாம் 1913ம் ஆண்டில் முடிவுக்கு வந்துவிடும், காந்தியும் மன நிறைவோடு இந்தியாவுக்குத் திரும்பிவிடுவார். காந்திக்குக்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 18

18. ரிதம் தமாலபத்ரத்தினும் வீரியம் கொண்ட மூலிகையொன்று எனது பர்ணசாலையின் தெற்கே உள்ள சிறு வனத்திலேயே இருக்கிறது என்று சம்யு சொன்னான். மயோபுவின் ஆசிரமத்தில் இயற்றப்பட்ட யாகத்துக்குச் சென்றிருந்தபோது பேச்சுவாக்கில் அவன் இதனைக் குறிப்பிட்டதும் ‘நீ எப்போது அங்கே வந்தாய்?’ என்று கேட்டேன். அவனுக்கு...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 17

17. உலகப் புதுமை மக்கள் அரசாங்கத்திடம் ஒரு கோரிக்கை வைக்கிறார்கள். அரசாங்கம் அதை ஏற்க மறுத்துவிடுகிறது. அதனால், மக்கள் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள். அரசாங்கம் இப்போதும் அவர்களுடைய கோரிக்கையை ஏற்க மறுத்துப் பிடிவாதம் பிடிக்கிறது, போராட்டத்தில் ஈடுபடுகிறவர்களைப் பிடித்துச் சிறையில்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 17

17. ஒற்றைப் புல் நான் பிராயங்களை அறியாதவன். மழலைப் பருவத்தையும் வளரும் பருவத்தையும் வாலிபப் பருவத்தையும் வயோதிகத்தையும் என்றுமே உணர முடியாதவன். அவற்றின் மகிழ்ச்சியையும் துயரத்தையும் அறிய ஒண்ணாதவன். தாயும் தகப்பனுமின்றித் தோன்றியவன் என்பதால் பாசம் என்ற அடிப்படை மானுட உணர்ச்சியின் ருசியை அறியமாட்டேன்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 16

16. அரைகுறை மருத்துவர் கோகலேவின் உடல்நலக்குறைவைப்பற்றிக் காந்தி ஏற்கெனவே அறிந்திருந்தார்தான். ஆனால், தென்னாப்பிரிக்காவில் ஒரு மாதத்துக்கு அவரை அருகிலிருந்து பார்த்தபிறகு, அவருக்குப் பணிவிடைகள் செய்தபிறகு, கோகலேவை எப்படியாவது நலமாக்கிவிடவேண்டும் என்று காந்திக்குத் தவிப்பாக இருந்தது. கோகலே நல்ல...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 16

16. சாபம் கிராத குலத்துச் சாரன் ஒருவனின் மனத்துக்குள் புகுந்து தன்னுடைய சரிதத்தைத் தானே எழுதிக்கொள்ள அந்தச் சூத்திர முனியால் எப்படி முடிந்ததென்று உங்களுக்குத் தெரியுமா? இது கலையல்ல. மாயமந்திரமல்ல. அற்புதமோ அதிசயமோ அல்ல. இது ஒரு விஞ்ஞானம். எதுவும் ஒன்றென உணர்ந்தவர்களுக்குப் புரியும்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 15

15. கசப்பில்லை, பகையில்லை கோகலே தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்த கையோடு காந்தியைப்பற்றி ஒரு விரிவான உரையை நிகழ்த்தினார். அங்குள்ள இந்தியர்களின் நலனுக்காகக் காந்தி என்னவெல்லாம் செய்துகொண்டிருக்கிறார் என்பதை இங்குள்ள இந்தியர்களுக்குத் தெளிவாகத் தெரியப்படுத்திவிடவேண்டும் என்கிற அவருடைய ஆர்வம்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 15

15. சூத்திர முனி யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். தமக்கெதிராக ஒரு குரலை வாழ்நாளில் அவர்கள் கேட்டிருக்கவும் வாய்ப்பிருந்திருக்காது. தவிர, ஓர் எறும்பு எழுந்து நின்று பேசுவது போல நான் ஆவேசப்பட்டது அவர்களுக்கு வினோதமாகவும் இருந்திருக்க வேண்டும். சில விநாடிகளுக்கு அவர்கள் யாரும் பேசவேயில்லை...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 14

14. மென்மையின் மேன்மை 1912 நவம்பர் 17. கோகலே தன்னுடைய தென்னாப்பிரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியாவுக்குப் புறப்பட்டார். கோகலேவைப் பிரிவது காந்திக்கு எப்போதும் வருத்தம்தான். ஆனால், இந்தமுறை அவர் மனத்தைத் தேற்றிக்கொள்வதற்கு இரண்டு விஷயங்கள் இருந்தன. முதலில், கோகலேவின் வருகை தென்னாப்பிரிக்கச்...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 14

14. குறி இன்றைக்கு உனக்கு அம்பெய்யக் கற்றுத்தருகிறேன்; புறப்படு என்று என் தகப்பன் சொன்னான். உடனே அம்மா ஓடிச் சென்று, என்றோ பத்திரப்படுத்தி வைத்திருந்த காட்டெருமையின் கீழ்வரிசைப் பல் ஒன்றை எடுத்துச் சிறிய துணியில் முடிந்து என் வலது தோளில் தாயத்தாகக் கட்டிவிட்டாள். எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாகவும்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!