Home » மாணவர்கள் » Page 3

Tag - மாணவர்கள்

கல்வி

உதவாத படிப்புகள்

பல்வேறு பல்கலைக்கழகங்கள் வழங்கும் இருபத்தியொரு பட்டப்படிப்புகள் அரசுப் பணிகளுக்கான கல்வித் தகுதியாக ஏற்கப்படாது என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட பட்டப்படிப்பில் சேர்ந்து படித்துக்கொண்டிருக்கும் / படித்து முடித்திருக்கும் அத்தனை மாணவர்களும் பேச்சற்றுப் போயிருக்கிறார்கள். கல்வி...

Read More
கல்வி

நீ பின்லாந்துக்குப் போயிடு சிவாஜி!

உடன் பணிபுரியும் ஒருத்தியின் குழந்தை இரண்டாம் வகுப்புப் படிக்கிறாள். குழந்தைக்கு டெஸ்ட் என்றால் போதும்…. உடனே லீவு போட்டுவிட்டுக் குழந்தைக்குச் சொல்லித்தரப் போய்விடுவாள். நம் கல்வி முறைக்கு பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்விற்காக பெற்றோர்கள் விடுமுறை எடுத்துக்கொள்வார்கள். வீட்டில்...

Read More
கல்வி

‘பிள்ளை பிடிக்கும்’ பள்ளிக் கல்வித் துறை

பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொள்ளவில்லை என்பது பழைய செய்தி. கடந்த வாரங்களில் இது குறித்து எழுதிய கட்டுரைக்காக நாம் சில அரசு மற்றும் அரசு உதவி பெறும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பேசியிருந்தோம். பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்விலும் இந்த...

Read More
சமூகம்

ஆன்லைன் காலமும் ஆஃப்லைன் அனுபவங்களும்

இந்த வருடம் எப்படிக் கழிந்தது? இரண்டு வருட தொற்றுக்கால வீடடங்கல் முடிந்து கல்லூரிக்குச் சென்ற தலைமுறையினர் சிலரிடம் கேட்டோம்: வர்ஷா சரஸ்வதி: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரியில் பி.சி.ஏ மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். இந்த ஆண்டுத் துவக்கத்தில் எந்தவிதத் தீர்மானமும்...

Read More
ஆளுமை

இப்படியும் ஓர் ஆசிரியர்

“உங்க வீட்ல கொஞ்சம் கூட எதிர்ப்பு வரலயா சார்?” புருவங்களை உயர்த்துகிறேன். பின்னே? ஒரு மனிதன் நான்கு பழைய சப்பாத்துக்களோடு வீடு திரும்பி மாலை முழுதும் அவற்றோடு மல்லுக் கட்டினால், எந்த மனைவிதான் சும்மா இருக்கப் போகிறார்? ஆமாம் யாரந்த மனிதர்? மஹிந்த சார்! ஒரே இரவில் புகழ் பெற்ற ஆசிரியர். சென்ற...

Read More
கல்வி

மாணவர்களைக் கையாள்வது எப்படி?

கொழும்பில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும் ரும்மான் தருகிற இந்த ஆலோசனைகள், ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல; பெற்றோருக்கும் பொருந்தும். எனது மாணவர்களிடத்தில் யாராவது “உங்களுக்கு மிகப் பிடித்த டீச்சர் யார்” என்று கேட்டால் தயக்கமின்றி அவர்கள் என் பெயரைச் சொல்லி விடவேண்டும். மிகப் பெரிய திட்டம்தான்...

Read More
சமூகம்

வேப்பிங் அபாயம்: மாணவர்கள் ஜாக்கிரதை

“அம்மா, இன்னைக்கு எங்க ஸ்கூல்ல பாய்ஸ் அன்ட் கேர்ள்ஸ் வேப்பிங் பண்ணதா கம்பளைண்ட் வந்து இருக்கு” என்றாள் மகள். ‘அப்படின்னா?’ சட்டென்று கேட்க தைரியம் இல்லை. நாம் ஒன்று கேட்க மகள் எதிர்பார்க்காத அளவில் பெரிதாக எதையாவது சொல்லிவிட்டால்? அந்தத் தயக்கம்தான் காரணம். பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும்...

Read More
உலகம்

புத்தகம், நோட்டு, பேனா, பென்சில் மற்றும் துப்பாக்கி

மாதம் ஒரு முறையாவது நாளிதழ்களில் பார்க்கிறோம். அமெரிக்கப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு. இந்த அபாயகரமான அபத்தம் உலகில் வேறெங்கும் நடப்பதில்லை. அமெரிக்காவில் மட்டும்தான் அடிக்கடி நடக்கிறது. மாணவர்கள் பள்ளிக்கூடம் சென்றால் படித்து, கல்வியறிவு பெறுவார்கள். ஆனால் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு சாவார்களா...

Read More
கலாசாரம் தமிழ்நாடு

பிள்ளையாரைக் காணவில்லை

திருவாரூர் இங்க் பிள்ளையார் ஒரு காலத்தில் தியாகேசரைவிடப் பிரபலம். ஆனால் காலம் கடவுளையும் சும்மா விட்டு வைப்பதில்லை. ஆற்று நீரை வாயில் எடுத்து வந்து சிவனுக்கு அபிஷேகம் செய்த கண்ணப்ப நாயனாரின் கதையை யாரோ ஒரு பள்ளிக்கூட மாணவன் கேட்டுத்தான் அப்படியொரு நடைமுறையைக் கொண்டு வந்திருக்க வேண்டும். திருவாரூர்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!