ஏப்ரல் மாதம் ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களிலும் புதுச்சேரியிலும் தேர்தல் நடைபெற உள்ளது. கேரளா தவிர மற்ற மாநிலங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் இண்டி கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் உள்ளன. அதனால் இந்தத் தேர்தல் பாஜக – காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் போட்டிக் களமாக இருக்கும்.
மேற்கு வங்காளம்
தேசிய அளவில் கவனம் பெற்றுள்ள தேர்தல்களில் ஒன்று மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தல். அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசை முழுவீச்சில் எதிர்ப்பதுதான் அதற்கு முக்கியக் காரணம்.
அம்மாநிலத்தில் இருநூற்றுத் தொண்ணூற்று நான்கு சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. அவற்றில் நூற்று நாற்பத்தெட்டு தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கலாம். அதிகமான தொகுதிகள் உள்ளதால் இந்த மாநிலத்தில் மட்டும் ஏப்ரல் 23, 29 என இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.















Add Comment