‘இந்தியாவின் பணிபுரியும் நிலை 2026’ (State of Working India 2026) என்ற விரிவான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம். அதன்படி, இந்திய இளைஞர்கள் முன்னெப்போதையும்விட அதிக அளவில் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர். அதற்கு முரணாக, வேலையின்மை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் பதினைந்திலிருந்து இருபத்தொன்பது வயதுவரை உள்ளோரின் எண்ணிக்கை சுமார் முப்பத்தாறு கோடியே எழுபது லட்சம். உலகின் வேறெந்த நாட்டையும்விட இது அதிகமான இளைஞர் தொகை. இந்தியாவின் பணிபுரியும் மக்கள்தொகையில் இந்த எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு.
இவர்களுள் சுமார் இருபத்தாறு கோடியே முப்பது லட்சம் பேர் கல்வி கற்காதவர்கள். அதாவது, ஒரு திறன் வாய்ந்த தொழிலாளர் படையை உருவாக்க வல்லவர்கள். ஏனெனில் இவர்கள் விரைவில் வேலைக்குச் செல்வதற்கான சாத்தியங்கள் அதிகம்.
















Add Comment