ரஷ்யா உக்ரைன் மீது போர் அறிவிப்பு செய்த போது, உக்ரைனில் படிக்கும் இந்திய மாணவர்களின் மீட்பு குறித்த செய்திகள் அதிகம் வெளிவரலாயின. இந்திய ஒன்றிய, மாநில அரசுகளுக்குப் பெரும் சவாலாக அமைந்த இந்த மீட்பு நடவடிக்கைகளின்போது சில கேள்விகள் நம் மனத்தில் தோன்றின. இவ்வளவு இந்திய மாணவர்கள் உக்ரைனுக்குப் போய் ஏன் படிக்க வேண்டும்? அதிலும் குறிப்பாக மருத்துவம் படிக்க ஏன் போகிறார்கள்? இந்தியாவில் இல்லாத மருத்துவக் கல்லூரிகளா? இந்தியாவில் இல்லாத வசதிகளா? போர்ச் சூழலில் சிக்கிக் கொண்ட நிறைய தமிழக மாணவர்கள் கூட செய்திகளில் பேசுவதைப் பார்த்தோம். வெளிநாட்டில் உயர்கல்வி என்றாலே அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குத் தான் போவார்கள். உக்ரைன், ஜார்ஜியா, ரஷ்யா, போலந்து போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குப் போய் ஏன் மருத்துவம் படிக்க வேண்டும்? இவ்வளவு மாணவர்களைக் கிழக்கு ஐரோப்பா எப்படி ஈர்க்கிறது?
இதைப் படித்தீர்களா?
வாக்களிக்கத் தகுதி படைத்த முதல்முறை வாக்காளர்கள் உள்ளிட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் வாழ்த்துகள். தேர்தல் திருவிழாவின் இறுதி நாளுக்கு வந்துவிட்டோம்...
முகங்கள் போதும் 03- பிப்- 1990. குடும்பத்துடன் தனது சொந்த ஊரான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வந்து சேர்ந்தார் வலோத்யா. கிழக்கு ஜெர்மனியிலிருந்து அடுத்து...
-
Share This!















Add Comment