ஏஐ ஒரு பணியாள். நாம் அதற்கிடும் கட்டளைகளை ‘செவ்வனே’ செய்து முடிக்கும். ஆனால் ஒரே ஒரு சிக்கல். கட்டளைகளில் அணுவளவும் குழப்பம் கூடாது. இரட்டுற மொழிதல் எல்லாம் கவிதையோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். ஏஐயிடம் ஆகாது.
இன்றைய சாஃப்ட்வேர் டீம்களில் மனிதர்களோடு சேர்ந்து ஏஐயும் உழைக்கிறது. அதாவது மனிதர்களை வேலைக்கு எடுப்பது போல ‘அதையும்’ வேலைக்கு எடுத்துள்ளோம்.
மனிதர்களைச் சேர்க்கும்போது பலகட்ட நேர்காணல்கள் நடத்துவோம். ஆனால் ஏஐக்கு அப்படி எதுவும் நடத்துகிறோமா என்றால் இல்லை. அவற்றை உருவாக்கும் நிறுவனங்கள் சொல்வதை அப்படியே நம்பி ஏற்றுக்கொள்கிறோம்.
நம்பியவர்கள் கைவிடப்பட்ட கதைகளும் உண்டு. அப்படியான சம்பவம் ஒன்று அண்மையில் நிகழ்ந்துள்ளது. ஒரு நிறுவனத்தின் ஒட்டுமொத்த டேட்டாவையும் காலி செய்துள்ளது ஏஐ.















Add Comment